மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் நடத்திய நூதன வழிபாடு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 'வட் பூர்ணிமா' தினமான நேற்று அடுத்த 7 ஜென்மத்திற்கும் இதே கணவன் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என பெண்கள் ஆலமரத்தை சுற்றி பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் அதேபகுதியில் மனைவியால பாதிக்கப்பட்ட ஆண்கள் இந்த மனைவி இனி எந்த ஜென்மத்திலும் வரக்கூடாது என அரச மரத்தை 108 முறை சுற்றி நடத்திய நூதன வழிபாடு பரபரப்பை ஏற்படுத்தியது
மேலும் குடும்பத்தில் ஆண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மனைவி மீது அதிருப்தியில் உள்ள 'பத்னி பீதித் (மனைவியால் பாதிக்கப்பட்டவர்கள்) என்ற சங்கத்தை நடத்தி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…