Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

இனி ரேஷன் கடைகளிலேயே சிலிண்டர்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!

Sekar October 02, 2022 & 13:23 [IST]
இனி ரேஷன் கடைகளிலேயே சிலிண்டர்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!Representative Image.

தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளிலேயே கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என தமிழா கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நியாய விலைக் கடைகளில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் ஆகியோர் நலை கருத்தில் கொண்டு 5 கிலோ மற்றும் 2 கிலோ கமர்ஷியல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை துவக்கப்பட உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த கேஸ் சிலிண்டர் விநியோகம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அக்டோபர் 6 ஆம் தேதி ரேஷன் கடைகளில் 5 கிலோ கேஸ் சிலிண்டர் விநியோயகம் தொடங்கப்பட உள்ளது. அரிசி வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகி விடும் என நுகர்வோர்களை பயமுறுத்தக்கூடாது. அரிசி வாங்காவிட்டாலும் ரேஷன் கார்டு செயல்பாட்டில் இருக்கும். 

இதன் மூலம் உண்மையாகவே அரிசி தேவைப்படுபவர்கள் மட்டும் வாங்கமுடியும். மேலும் கூட்டுறவு நகைக்கடனுக்கான வட்டியும் குறைக்கப்படும்." என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்