கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊராடங்கால் நடுத்தர வர்க்கத்தினர் வேலை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மஆணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாகவும், இடைநிற்றலை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.இதனையடுத்து படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகளை மீண்டும் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…