திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி தனது ஓசி பேச்சு சர்ச்சையான நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, இப்போ எல்லாரும் ஓசி பஸ்ல போறீங்க என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது பெண்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது இந்த கேள்விக்கு பதிலளித்த பொன்முடி, தான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசியதை பெரிதாக்குகிறார்கள், வேறு தவறான எந்த எண்ணத்திலும் பேசவில்லை. அதனால் அதை யாரும் பெரிதுபடுத்த தேவையில்லை என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…