நம்முடைய வாழ்நாளில் ஒரு அங்கமாக இருப்பது எறும்பு. வீட்டில் அல்லது நாம் இருக்கும் இடத்தில உணவுகளை சேகரிக்க கூட்டம் கூட்டமாக செல்லும். பார்க்க தான் ஆளோட சைஸ் சின்னது, ஆனா யானையோட காதுக்குள்ள போய் அவ்ளோ பெரிய உருவத்தையே சாய்க்கும் அளவுக்கு பலசாலி அது. அப்படியான எறும்பை நாம் தூரத்தில் தான பார்த்திருக்கிறோம். அதை பக்கத்தில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று என்னைக்காவது யோசித்து இருப்போமா.
2022 Nikon Small World Photomicrography போட்டியானது சமீபத்தில் நடந்தது. இது சாதாரண கண்களால் பார்க்க முடியாத உயிரினங்களை புகைப்படம் எடுக்க தேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் உலகம் எங்கும் உள்ள புகைப்பட கலைஞர்ள் பங்கேற்றுள்ளனர். அதில் இறுதியாக 57 கலைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் தேர்ச்சி பெற்றது. அதில் யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் மைக்ரோஸ்கோப்பில் எடுத்த புகைப்படம் வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் கலந்து கொண்ட லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் என்பவர் எறும்பின் முகத்தை மிகவும் பக்கத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து அதற்கு பரிசுகளையும் வாங்கியுள்ளார். அதை பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. கோர பற்கள், மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் பார்க்கவே ராட்சஷன் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. இது எறும்பு தானா என்று யாரும் நம்ப மாட்டார்கள் அப்படி இருக்குது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…