சமீப காலமாக நடிகை மீரா மிதுன் குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இவர் சமீபத்தில் பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் படி, நடிகை மீரா மிதுன் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த நண்பரான சாம் அபிஷேக் போன்றோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் ஒன்று எழுந்துள்ளது. இந்த வழக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்தனர்.
அதன் பின், ஜாமினில் வெளிவந்த இவர்களுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் நாள் இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால், இவரைக் கைது செய்ய உத்தரவு அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து, நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மீரா மிதுனை போலீசார் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக உள்ளதால் மீரா மிதுனை கைது செய்யப்பட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நீதிபதி விரைந்து பிடிக்குமாறு போலீசாரிடம் அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…