மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
5 முறை தமிழக முதல்வராக இருந்த திராவிட இயக்கத் தலைவரின் 16 அடி உயர வெண்கலச் சிலை மீது ட்ரோன் மூலம் ரோஜா பூக்கள் கொட்டப்பட்டன. மேலும், 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் 3 நாள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதனையடுத்து ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆ.ராஜா மற்றும் பல்வேறு திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…