உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கு நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் 100 வது நாளை கடந்து இன்னும் நடந்து வருகிறது. இந்நிலையில் போர் காரணமாகவும் உக்ரைஇனில் இருந்து உணவு ஏற்றுமதி சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. மேல்ம் ரஷ்யா மீது போடப்பட்டுள்ள தடைகள் மூலம் உலகம் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐநா கவலை தெரிவித்தது.
இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வளர்ந்து வரும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம். உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது? அது என்ன பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதைக் காண முடிகிறது. உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால், மேற்கத்திய நாடுகள் பிரச்சனைகளுக்கு ரஷியாவை பலிகடாவாக ஆக்குகிறது என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…