Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. போக்ஸோவில் இளைஞன் கைது.. பரபரப்பு பின்னணி!!

Sekar October 07, 2022 & 11:15 [IST]
10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. போக்ஸோவில் இளைஞன் கைது.. பரபரப்பு பின்னணி!!Representative Image.

திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான தீனதயாளன் எனும் இளைஞரும், தற்கொலை செய்துகொண்ட மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர்.

காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தீனதயாளன் தனது மகளை தாக்கி, பாலியல் தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், தீனதயாளன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்