தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாத கடைசியில் தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில்,அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அக்டோபர் 1 முதல் 9 ஆம் தேதி வரை 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த விடுமுறையை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 ஆம் தேதி வரையும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 ஆம் தேதி வரையும் நீடித்தது.
இந்நிலையில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றோடு காலாண்டு தேர்வு முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…