கோயில் திருவிழாவின் போது நாட்டு வெடி கூட்டத்திற்குள் வெடித்ததில் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருச்சி, மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டி கோயில் திருவிழாவில் சாமி வீதி உலா புறப்பாடுக்காக ஆயத்தமானதை தெரிவிக்கும் வகையில் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது ஒரு பகுதியில் வெடி எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி கூட்டத்துக்குள் புகுந்ததில் குமரப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து தகவல்றிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவிழாவில் பட்டாசு வெடிக்க முன் அனுமதி பெறப்பட்டதாக என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிஆவில் பட்டாசு வெடித்து பலர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…