உரங்கள், தானியங்கள் ஏற்றுமதிக்கு மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என அதிபர் ஜோ.பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போரில் தொடக்கத்தில் இருந்தே உக்ரைனுக்கு, ஆயுத உதவி, நிதியுதவியை அமெரிக்கா செய்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும், அவர் 'இந்த போர் இராஜதந்திரத்தின் மூலமே முடிவடையும்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யாவின் மீதான தடையால் ஏற்பட்டுள்ள உலகளாவிய உணவு பாதுகாப்பின்மையை தவிர்க்க தானியங்கள் மற்றும் உரங்களை மட்டும் ரஷ்யா ஏற்றுமதி செய்ய அமெரிக்கா அனுமதிக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ரஷ்யா மீது இன்னும் கடுமையான தடைகளை மேற்கத்திய நாடுகள் விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…