Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மூன்று இடத்தில் கை வரிசையை காட்டிய கட்டு விரியன் பாம்பு! அதையும் சிகிச்சைக்கு அழைத்து சென்ற இளைஞன்!

Priyanka Hochumin October 13, 2022 & 10:40 [IST]
மூன்று இடத்தில் கை வரிசையை காட்டிய கட்டு விரியன் பாம்பு! அதையும் சிகிச்சைக்கு அழைத்து சென்ற இளைஞன்!Representative Image.

தன்னை கடித்த பாம்பை தன்னுடனே சிகிச்சைக்கு எடுத்த சென்று இளைஞன், பதறிய மருத்துவமனை ஊழியர்கள்.

கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் பகுத்தியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தன்னுடைய அண்ணனுக்குச் சொந்தமான கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த கட்டு விரியன் பாம்பு விக்னேஷை சரமாரியாக மூன்று இடத்தில் தன்னுடைய கை வரிசையை காட்டியுள்ளது. என்ன தான் தன்னை மூன்று இடத்தில் கொத்தினாலும், அதுவும் ஒரு ஜீவன் தானே என்று நினைத்துள்ளார் விக்னேஷ். எனவே, கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு தன்னை கொத்தின கட்டு விரியன் பாம்புடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் பீதியில் அலறினர். இதனால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்