கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்கு நுழைந்த மர்ம நபர், தனது உடலில் 'ஓம் சிவா' என பச்சைகுத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் புகுந்து உட்புறமாக பூட்ட முயன்றார். அவரை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் உதவியாளர் விஜயன் என்பவர் அடித்து விரட்டினார்.
கோவையில் தனியார் உணவக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (51), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று இரவு தொழில் ரீதியாக கண்ணன் என்பவருக்கு பணம் கொடுக்க ரூ.70 லட்சம் பணத்துடன் தனது காரில் அவினாசி சாலை சித்ரா அருகே அன்னப்பூர்னா உணவகத்திற்கு வந்துள்ளார்.
கோவை: பாஜக எம்எல்ஏ அலுவலகத்திற்குள் புகுந்து சலசலப்பை ஏற்படுத்தி விட்டு மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். கோவை ஓசூர் சாலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாஜகவின் வானதி சீனிவாசன், இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். நேற்று மாலை 3.30 மணி அளவில் அலுவலக உதவியாளர் விஜய் என்பவர் பணியில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து உள் பக்கமாக கதவை தாளிட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் அந்த நபருடன் போராடி அவரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார். இந்நிலையில் அந்த வாலிபர் மாலை 6.30 மணி அளவில் கோவை-அவிநாசி சாலையில் அண்ணா சிலை அருகே சாலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் வாலிபரின் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், அந்த வாலிபர் சாலையை கடந்து சென்று வேகமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் மீது மோதி தற்கொலை செய்து கொண்டது பதிவாகியுள்ளது. அந்த வாலிபர் ஏன் இவ்வாறு ஈடுபட்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் மது போதையில் இருந்தாரா? அல்லது கஞ்சா போதையில் இருந்தாரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தீவிரமடையும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை தெற்கு சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் சாலையோரத்தில் சடலமாக கிடந்தது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். நேற்று மாலை 5. 50 மணி அளவில் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார். கதவை சாத்திய நபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் பிடித்து வெளியேற்றினார். மேலும் இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் மர்மநபர் புகுந்தது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சட்டமன்ற அலுவலகத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அண்ணா சிலை சிக்னல் அருகே அலுவலகத்திற்குள் புகுந்த நபர் சடலமாக கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்கு நுழைந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்தும் , அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையின் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளாவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கோவையில் முதல் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா பணிபுரிந்து வருகிறார். 23வயதில் கனரக வாகனத்தை இயக்கும் அவருக்கு பல்வேறு தரப்பினரும், பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருடன் சிறிது தூரம் உரையாடியபடி, பேருந்தில் பயணித்தார்.
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2018ல், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை உடைப்போம் என பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவையில் தபெதிக-வினர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் எச்.ராஜாவை கண்டித்து தபெதிக-வை சேர்ந்த கோபால், ஜீவானந்தம், கவுதம் ஆகிய மூன்று பேரும் 2018 மார்ச் மாதம், கோவை விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
கோவையில் 10 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக, இரண்டு காமுகர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்ற ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலர் வீட்டில் 63 சவரன் நகை திருடட்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காளப்பட்டி அருகே கடந்த 28 ம் தேதி இரு சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ....
பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.