தேனியில் தாய்மாமன் வீட்டிற்கு விருந்திற்கு சென்றபோது, ஆற்றில் குளிக்கப்போய் தவறி விழுந்து புதுமணத் தம்பதி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த சஞ்சய் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் மாமா தேனியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோவையைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. தாய்மாமா திருமணத்திற்கு லண்டனில் இருந்ததால் வரமுடியாத சஞ்சய், தற்போது ஊர் திரும்பிய நிலையில், போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக இருவரையும் அழைத்துள்ளார். இதையடுத்து போடி சென்ற தம்பதியை, சஞ்சய் அருகாமையில் உள்ள பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
தேனி மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி தெற்கு ஒன்றியத்தில் திமுக பொறுப்பாளராக இருக்கும் ரத்தின சபாபதி, வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் கூட. இவர் நேற்று இரவு வீரபாண்டியில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவருடைய வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து உருட்டு கட்டை மற்றும் கற்களால் ரத்தினசபாபதியை தாக்கி உள்ளனர். மேலும் அவருடைய வீட்டின் மீதும் அந்த கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 9 மாணவர்களின் பெற்றோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
Theni Latest News : தேனியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் ஜெய்முருகேஷ் என்பவர் வீடு வாடகைக்கு, ஒத்தி, வீட்டடி மனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இளைய மகனின் திருமணத்தன்று தனது மூத்த மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தந்தையை போலீசார் கைதுசெய்துள்ளனர்
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள மகாராஜா மெட்டில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
போடி அருகே ஓசியில் மது வாங்கி தராததால், இறைச்சிக்கடை ஊழியரை கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்தார்.
வீரபாண்டியில் இருக்கும் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பல இடங்களில் டீ காபி பால் போன்றவைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான சாமானியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.