108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்புறமும், பெரிய பெருமாள் சன்னதிக்கு முன்பு கோபுரம் வாசலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சரியாக 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. சரியாக 6 மணிக்கு ஏற்றப்படும் போது ‘அண்ணாமலையருக்கு அரோகரா’ என விண்ணை பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் கோஷமித்திற்கு நடவே தீபம் ஏற்றப்பட்டது.
சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. இதற்காக மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலையில் மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்பட உள்ளது. அதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கு அந்த தீபம் காட்டப்பட்டது. அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக காட்டப்பட்டது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கார்த்திகை தீபம் திகழ்கிறது. கார்த்திகை தீபத்தை தமிழகம் பாரம்பரிய விழாவாகக் கொண்டாடுகிறது. இந்த பண்டிகையானது தமிழகத்தைக் கடந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் முழுவதுமே விமரிசையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
Gowthami Subramani December 05, 2022
கார்த்திகை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம் திருநாள் சிறப்பான நாளாகும். கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளாகும். இத்தினத்தில் கோவில்களிலும், இல்லங்களிலும் பிரகாசமான தீபங்கள் ஏற்றப்பட்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்படும். திருவண்ணாமலையில் தீப ஒளி ஏற்றப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மாள் வழிபாடு சிறப்பாக நடைபெறும். இந்த சுப தினத்தில், எல்லோருடைய வாழ்விலும் தீப ஒளி மின்னுவது போல், கார்த்திகை தீபம் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்.
Gowthami Subramani December 05, 2022
தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது போல, கார்த்திகை மாதத்திற்கென சிறப்பு உண்டு. இம்மாதம் முழுவதும் சிவபெருமானை வணங்கி வழிபடுவதன் மூலம், அனைத்து நன்மைகளும் கிடைக்கும் எனக் கூறுவர். எனவே தான், கார்த்திகை மாதத்தில் பரணி, பௌர்ணமி, திங்கட்கிழமை போன்றவை சிறப்புக்குரியதாக அமைகிறது. அதன் படி, இந்தப் பதிவில் கார்த்திகை மாதத்தில் வரும் பரணி தீபம் பற்றிய விவரங்களைப் பற்றி காண்போம். முன்னோர்களை வணங்கும் தினமாக அமையும் அமாவாசை தினத்திற்கு அடுத்தபடியாக அமைவது, பரணி நட்சத்திர தினமாகும். இந்த தினத்தில், நம் வீட்டில் விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வைப் பெறலாம்.
Nandhinipriya Ganeshan December 05, 2022
தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், கார்த்திகை மாதத்திற்கு சிறப்பைக்கொடுக்க கூடியதே கார்த்திகை தீபம் தான். தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகை என்றால் இது தான். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் எங்கும் அகல் விளக்குகளை ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம். வீடுகள் மட்டுமல்லாமல், கோவில்களும் இந்நாளில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். மேலும், இந்த தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம் தான். பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான இந்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். அங்கு தீபம் ஏற்றிய பிறகு தான் வீடுகளில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். இத்தகைய சிறப்பான நாளில், வாசலிலும் கோலங்களிட்டு, கோலத்தின் மீது விளக்கு வைத்து, வீட்டை மட்டுமல்லாமல், வீட்டு வாசலையும் பிரகாசிக்கச் செய்வோம். இந்த இனிமையான நாளில் அன்பையும் வாழ்த்தையும் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள், மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. உங்கள் ஊரில் இருந்து இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் மற்றும் பேருந்து குறித்த தகவல்களை காணலாம்...
Gowthami Subramani December 03, 2022
காலை எழுந்தவுடன், வாசலில் கோலம் போடுவதற்கென எப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதோ? எந்த மாதத்தில் எந்த வகையான கோலம் போடுவது சிறப்பு என்பதற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இதில், குறிப்பாக, கார்த்திகை மாதம் முழுவதும் ஒரு சிறப்பான மாதமாகும். ஐயப்பனை வேண்டி மாலை அணிந்து, விரதமிருந்து இருக்கும் மாதமும் கார்த்திகை மாதம் தான். எல்லா சிறப்புகளையும் அருளும் ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் வாசலில் போடும் கோலங்களும் நிவர்த்தி அடையுமாறு அமைய வேண்டும். இதில், கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் போடும் சில கோலங்களைக் காண்க.