மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதற்கான அறிவிப்பை படநிறுவனமே வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. வரும் மார்ச் 31ம் தேதி முதல் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான புரோமோசன் நிகழ்வுகளைத் துவக்க இருக்கிறதாம் படக்குழு. இதற்கு முன்னதாகவே மார்ச் 2வது வாரத்திலிருந்தே பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம். மார்ச் மாத இறுதியில் டீசர் ஒன்று வெளியாகுமாம். பின்னர் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது. கப்பல் விபத்தில் அருள்மொழி வர்மன் கடலில் சென்றுவிட்டார் என அனைவருக்கும் தகவல் வர, சோழ குலமே பரிதவித்துப் போகின்றது. தூது சென்ற வந்தியத்தேவன் தப்பித்துவிடுகிறான். அருள்மொழி வர்மனைக் காக்க கடலுக்குள் குதிக்கிறாள் ஊமைராணி. இதன்மூலம் மக்களுக்கு புரிகிறது அருள்மொழி வர்மன் காப்பாற்றப்பட்டு விடுவார் என்பது. ஆனால் பரிதவிப்பில் இருக்கும் சோழர்களிடம் அருள்மொழி வர்மன் உயிரோடு இருப்பதை யார் சொல்வது? வந்தியத் தேவனுக்கு என்ன ஆனது? சோழ நாட்டைக் காப்பாற்ற அருள்மொழியை அழைத்து வருகிறானா ? தம்பிக்கு ஆபத்து நேர்ந்த நிலையில் கொதித்தெழுந்து வந்த ஆதித்த கரிகாலன் அடுத்து என்ன செய்யப்போகிறார்? நந்தினியின் திட்டம் நிறைவேறியதா என அனைத்து கேள்விகளுக்கும் இந்த பாகத்தில் விடை கிடைக்கும்.
UDHAYA KUMAR December 29, 2022
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி கொஞ்சம் ஷாக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தை முந்தி அடிக்க திட்டமிட்டு மிகவும் தீவிரமாக வேலை செய்து வரும் ஜெயிலர் படக்குழு இந்த செய்தியை அறிந்து கொஞ்சம் வருத்தத்தில்தான் இருக்கிறதாம். ஜெயிலர் திரைப்படம் வெளியாகி அடுத்து 2 மாதங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வராமல் இருந்தால், நிச்சயம் ரஜினிக்காக படம் ஓடிவிடும் என நினைத்திருந்தார்களாம். ஆனால் அடுத்த இரண்டாவது வாரமே பொன்னியின் செல்வன் வெளியாக இருப்பதன் காரணமாக, ஜெயிலர் படத்துக்கு பல குடும்பங்கள் வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதான் அடுத்த வாரம் பொன்னியின் செல்வன் வருதுல்ல. அப்ப போயிக்கலாம் என பலரும் இருக்க வாய்ப்புகள் உண்டு. சும்மாவே இப்போது ரஜினியின் கிராஃப் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடைசியாக வெளிவந்த அண்ணாத்த, பாபா படங்கள் படுதோல்வியடைந்து மண்ணைக் கவ்விய நிலையில், ஜெயிலர் படமும் மண்ணைக் கவ்விவிடுமோ என ரஜினி ரசிகர்களே கவலையில் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் மற்ற படங்கள் போல இது இல்லை. இந்த படத்தில் டாக்டர், பீஸ்ட் ஹீரோ மாதிரியான சைலண்ட் ஹீரோவாகவே வருகிறார். அதாவது அடக்கி வாசிக்கிறார் ஹீரோ என்கிறார்கள். அவர் அதிரடியாக எல்லாம் செய்தாலும் பஞ்ச் வசனங்கள் எதுவும் இதில் இருக்காது என்றும், நம்மில் ஒருவர் போலத்தான் இருப்பார் என்றும் பேசிக்கொள்கிறார்கள். இதனால் ஏப்ரல் முதல் வாரமே படத்தை வெளியிட்டால் 20, 25 தினங்கள் படம் ஓடினால்கூட நல்ல லாபம் கிடைக்கும் என கணக்கு போட்டிருக்கிறார்களாம். திட்டமிட்டதற்கு முன்னாடியே ஜெயிலர் வெளியாகலாம் என்றே கணிக்கிறார்கள் ஆன்லைன் டிராக்கர்கள்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்பாக, முன்கூட்டியே வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
Gowthami Subramani October 08, 2022
பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்த காவியக் கதையாக விளங்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து ராட்சச மாமனே பாடல் வரிகளை இதில் காண்போம். படம்: பொன்னியின் செல்வன் பாகம் 1 இயக்குநர்: மணி ரத்னம் பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் விநாயக்ராம் இசை: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் வரிகள்: கபிலன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக இயக்குனர் மணிரத்னம் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனின் தளபதிகளில் ஒருவரான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும், இதற்காக படத்தை இயக்கிய மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
Nandhinipriya Ganeshan September 30, 2022
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை இயக்குனர் மணிரத்தினம் "பொன்னியின் செல்வன்" என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். அந்தவகையில் இப்படத்தின் முதல் பாகம் இன்று திரையில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Nandhinipriya Ganeshan September 30, 2022
இளவரசிக்காக இலங்கைக்கு கிளம்புகிறான் வந்திய தேவன். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் நம்பி இனி நாமும் இலங்கைக்கு செல்லவேண்டியது தான் என்று புறப்புடுகிறார். இலங்கைக்கு செல்வேண்டுமென்றால் கோடிக்கரையில் இருந்த தான் செல்ல முடியும். அதற்காக வந்திய தேவனும் கோடிக்கரைக்கு வருகிறான். அப்போது படகோட்டி பெண் ஒருவரை பார்க்கிறான் வந்திய தேவன். இவள் பெயர் பூங்குழலி (சமுத்திரகுமாரி). இந்த பெண் வேறுயாரும் கிடையாது, சேந்தனமுதனோட முறைப்பெண் தான். அடுத்த நாள் காலையில் பழுவேட்டரையர்கள் காவலாளிகள் வந்திய தேவனை தேடிக்கொண்டு அங்கையும் வந்துவிடுகிறார். ஆனால், பூங்குழலி புத்திசாலி தனமாக வந்திய தேவனை காப்பாற்றி, படகு மூலம் இலங்கையில் கொண்டுப்போய் சேர்க்கிறாள். அன்னைக்கு இளவரசன் பொன்னியின் செல்வன் (அருள்மொழி வர்மன்) எங்கு இருப்பார் என்பதை தெரிந்துக்கொள்ள ஒரு தீவில் இறங்குகிறார்கள். இதற்கிடையில், ஆழ்வார்க்கடியான் நம்பியும் தனது குரு அநிருத்த பிரம்மராயர் உத்தரவின் படி அருள்மொழி வர்மனை அழைத்துவர இலங்கைக்கு செல்கிறான்.
Manoj Krishnamoorthi September 30, 2022
பொன்னியின் செல்வன் எழுத்தாளர் கல்கியின் படைப்பில் புகழ் பெற்ற நாவலாகும். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 1950- 1955 ஆம் ஆண்டு வரை தொடர்கதையாக வெளிவந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் நடக்கும் நிகழ்வுகளை உண்மை கதாபாத்திரமும் சில கற்பனை கதாபாத்திரமும் கலந்து வெளிவந்த இந்த வரலாற்று புதினம் எம்.ஜி. ஆர், கமல்ஹாசன் என பலர் கைமாறி இப்போது மணிரத்தினம் வழியாக வெள்ளித்திரையில் ஜோலிக்கிறது. தமிழ் சினிமாவின் பல நாள் கனவு 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்தின் திரை விமர்சனம் கீழே உள்ளது. கல்கியின் கதை திரையில் எப்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பற்றி அறிய வேண்டுமா..! மேலும் இந்த பதிவை பின்தொடரவும்.
Gowthami Subramani September 29, 2022
பொன்னியின் செல்வன் கதையில் இடம்பிடித்திருக்கும் நந்தினியின் கதாபாத்திரத்தில், கருத்திருமனும் முக்கிய பங்காற்றுகிறான். ஏனெனில், நந்தினி பற்றிய பல ரகசியங்களையும் தெரிந்தவன் கருத்திருமன். இவன் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தான். ஆழ்வார்க்கடியான், வீரபாண்டியனின் மகள் நந்தினி என்பதை கருத்திருமன் வழியாக கூறுவான். ஆழ்வாக்கடியான் கருத்திருமனிடம், “உண்மையைச் சொல்..! மதுராந்தகன் யாருடைய மகன்” என்று கேட்டான். இதற்கு கருத்திருமன் கூறியதாவது,”இது என்ன கேள்வி? செம்பியன் மாதேவியின்….. இல்லை, இல்லை, நெஞ்சை அமுக்காதே..! என் உயிர் போய்விடும்..! ஊமை மந்தாகினியின் மகன்” எனக் கூறினான்.
Gowthami Subramani September 29, 2022
நந்தினி வீரபாண்டியனுக்கு காதலி என்பதற்கும் எப்படி ஒரு சில கூற்றுகள் இருந்தனவோ, அதே போல நந்தினி வீரபாண்டியனுக்கு மகள் என்பதற்கும் சான்று இருக்கின்றன. இதில் முக்கியமாக, வந்தியத் தேவன், ஆழ்வார்க்கணியார், பெரிய பழுவேட்டையர், பைத்தியக் காரர் என கூறப்படும் கருத்துருமன் இவர்களின் வசனத்தை வைத்து, வீரபாண்டியனின் மகள் என்பதும் கூறப்படும். முதலில் வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி என கதை படி பெரிய பழுவேட்டையன் கூறுவான். அதன் பின்னரே, வந்தியத் தேவன் மற்ற இடங்களிலும் அவ்வாறு கூறியிருப்பான்.