நீங்களும் குறும்படம்,ஆவணப்படம் எடுக்கலாம் - தமிழக அரசின் சூப்பர் ஆஃபர்
இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இந்த திட்டம் ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது.
திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக குறும்பட திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த குறும்பட திருவிழா மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் 14 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் பங்கு பெற்று பயன் அடையலாம்.
குறும்பட போட்டிக்கான தலைப்புகள்:
1. பள்ளிக் கல்வியில் சிறு வயதிலேயே திறன் மேம்பாடு கல்வி பயிற்சியின் முக்கியத்துவம் 2. பாரம்பரிய திறன்களை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி இன்றைய சமுதாயத்திற்கு உதவும்?
3. தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கில் பயன்படுத்துவதற்கு வேலை வாய்ப்பு திறன்களை வழங்குதல் 4. திறன் மேம்பாட்டு கல்வி வேலைகளின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது?
5. டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்கள் 6. நடைமுறை (தொழில்கல்வி) திறன் பயிற்சிகளின் முக்கியத்துவம்.
இந்த ஆறு தலைப்புகளில் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.
குறும்படங்கள் தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கி 6 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.
குறும்படங்கள் புனைக்கதை, ஆவணப்படம், அனிமேஷன் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.
பரிசு:
தேர்ந்தேடுக்கப்பட்ட குறும்படத்திற்கு மட்டும் பரிசு வழங்கப்படும்.
முதல் பரிசு - ரூபாய் 50,000
இரண்டாம் பரிசு - ரூபாய் 25,000
மூன்றாம் பரிசு - ரூபாய் 10,000
புகைப்பட போட்டிக்கான தலைப்பு :
தமிழகத்தில் அழிந்து வரும் பாரம்பரிய திறன்கள்
வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 01.02.2023
பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் இடுகை இடுவதன் மூலம் பங்கேற்கலாம்
பங்கேற்பாளர்கள் socialmedia@naanmudhalvan.in என்ற மின்னஞ்சலிலும் சமர்ப்பிக்கலாம்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் 3 மாத கால இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in இணையதள முகவரியை பார்க்கவும்.