பொங்கல் திருநாளின் மூன்றாவது பண்டிகையாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால் நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, கால் நடைகளை அழகாக அலங்கரித்து, கழுத்தில் மணிகளைக் கட்டி, பொங்கல் வைத்து அவற்றிற்கு சாப்பிட கொடுப்பார்கள். இந்த நாள் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.