TNPSC குரூப் 4 & VAO தேர்வெழுதியோர் கவனத்திற்கு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...?

தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் வரைவாளர் போன்ற அரசு பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி 7301 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவடைந்து தற்போது 7 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை தேர்வின் முடிவு வெளியிடப்படவில்லை. இது குறித்து தேர்வர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Show comments

தொடர்பான செய்திகள்

TNPSC குரூப் 1 தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் வெளியீடு | TNPSC Group 1 Exam date Announced.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- தமிழக அரசின் மாஸ் திட்டம்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம் | NEET 2023 Result .

அரசுத் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் திட்டம்..! இந்த தேதிக்குள்ள மறக்காம விண்ணப்பியுங்க.. | Free Coaching For Government Jobs.