அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது. ஆனால், சில பயிற்சி நிறுவனங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தகுந்தவாறு கட்டணங்களை வசூலிக்கிறது. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு இலவச கட்டணமில்லா பயிற்சியை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இரயில்வே / வங்கி / SSC தேர்வர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.
நான் முதல்வன் திட்டம்
தமிழக முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இலவச கட்டணமில்லா பயிற்சியை வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் இரயில்வேத் துறை தேர்வு, வங்கி தேர்வுகள், மற்றும் SSC போன்ற ஒன்றிய அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திட்டம் தொடங்கப்படும் நாள்
இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 100 நாள்கள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் ஆனது வரும் மே மாதம் 25 ஆம் நாள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20, 2023 ஆகும். இந்த தேதிக்குள், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இது 100 நாள்கள் கட்டணமில்லா பயிற்சி வழங்கும் திட்டம் எனவும், 30 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. மேலும் 300 மணி நேரம் வழிகாட்டுதல் நடைபெறும் மற்றும் 120 தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. இத்துடன், பயிற்சி புத்தகங்கள் ஆனது பாட நூல்கள் மற்றும் கையேடுகளைக் கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல கீழே கொடுக்கப்பட்ட இணையதளத்தைக் க்ளிக் செய்யவும்.
இலவச கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்ட இணையதளத்தைக் க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…