குணசேகரனை வாங்கு வாங்கிய ரேணுகா மகள் மாஸ் சம்பவம் | Ethirneechal Today Episode
Updated:
தினமும் பல சுவாரஸ்யமான சம்பவங்களுடன் நடந்துக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பாப்போம்.
அண்ணனே வாழ்க்கை என்று வாழும் ஞானத்தை தன்னுடைய கடுமையான வார்த்தைகளால் காயப்படுத்துகிறான் குணசேகரன். அதனால் மனமுடைந்து கண்ணீர் விடும் ஞானம், தன்னுடைய மனைவி பிள்ளைக்கு என்ன செய்யப்போகிறேன் என்று வருந்துகிறான். இந்நிலையில் தன்னுடைய அண்ணனுக்கு ஆறுதலாக நிற்கிறான் சக்தி. குடும்பத்தில் இப்படி மாறி மாறி பிரச்சனை செய்வதால் வீட்டில் இருக்கும் அனைவரும் சோகத்தில் இருக்கின்றனர்.
இன்று ரேணுகாவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு பிறந்த நாள். அதனை கொண்டாட வீட்டில் இருக்கும் அனைவரும் ஏற்பாடு செய்யலாம் என்று கூறுகின்றனர். ஆனால் ரேணுகா ஞானம் எங்களுக்கு வக்கு இல்ல பிறந்த நாள்லாம் எதும் வேணாம் என்று சொல்கின்றனர். இருப்பினும் ஜனனி சக்தியுடன் சேர்ந்து ஐஸ்வர்யாவிற்கு புது டிரஸ் வாங்கி தந்து பிறந்த நாளை கொண்டாட விரும்புகிறாள். அவர்கள் வீட்டிற்கு வரும் போது குணசேகரன் எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க என்று கத்துகிறார்.
அதற்கு சரியான பதிலடி கொடுத்து ஜனனி பேசுகிறாள். அன்று இரவு 12 மணிக்கு ஐஸ்வர்யாவின் தோழிகளை வரவழைத்து கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இதனை பார்த்து காண்டாகும் குணசேகரன் கீழே வந்து கண்ணா பின்னான்னு கத்துகிறார். செம்ம கடுப்பான ஐஸ்வர்யா உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க நாங்க வெளிய போயிடறோம் ஆனா என்னோட பிரண்ட்ஸ் எதும் சொல்லாதீங்க என்று எதிர்த்து பேசுகிறாள். அனைவரும் பிரம்மித்து போய் பார்க்கின்றனர். இதன் பின்னர் குணசேகரன் என்ன செய்யப்போகிறான் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.