Nandhinipriya Ganeshan March 04, 2023
பொதுவாக விஜய் டிவியில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஒரு சில ஜோடிகளின் காதலை ரசிகர்களால் எதிர்பார்க்க கூட முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி தான் இப்போது ஒரு சீரியல் ஜோடி திருமணம் செய்துள்ளனர். சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று (மார்ச் 3) திருமணம் செய்துள்ளனர். சைலண்டாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Nandhinipriya Ganeshan March 04, 2023
தமிழ் சின்னத்திரையில் "கோலங்கள்" என்ற சீரியலை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் இயக்குநர் திருச்செல்வம். இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியலான "எதிர்நீச்சல்" சீரியலை இயக்கி வருகிறார். பெண்கள் அடிமைத்தனம், ஆண்களின் அதிகாரம் என்பதன் அடிப்படையில், எடுக்கப்பட்ட இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Nandhinipriya Ganeshan March 02, 2023
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தற்போது பாக்கியா மிகப்பெரிய கம்பெனியின் கேட்டரிங் ஆர்டரை கைப்பற்றியுள்ளார். இதனால், ராதிகா செம டென்சனில் இருக்கிறார். இனிமேல், தான் சீரியலில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கியா அடுத்தடுத்து தனது வாழ்க்கை பயணத்தில் வெற்றியை பெற்று வருகிறார். இப்படி ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கோபி ராதிகா, மகள் இனியாவிடமும் மாட்டிக்கொண்டு படாதபாடுபட்டு வருகிறார்.
Nandhinipriya Ganeshan February 27, 2023
வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல வெற்றிகளை கொடுத்தவர் ராதிகா சரத்குமார். ராடான் டிவி' என்கிற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சன் டிவியுடன் இணைந்து சித்தி, வாணி ராணி, செல்லமே என பல மெகா ஹிட் சீரியல்களை கொடுத்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியிலிருந்து வெளியேறி, கலர்ஸ் தமிழ் சேனலுக்கு சென்றிருந்தார். ஆனால் கலர்ஸ் தமிழ் சேனலில் பெரும்பாலான சீரியல்கள் முடிவுக்கு வந்தநிலையில், தற்போது இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி என்ற சீரியலில் நடித்துவருகிறார். இந்த நிலையில், விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதிகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் இளைய தளபதி விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கவுள்ளாராம். 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் கதையின் சீரியல் வெர்ஷனா 'கிழக்கு வாசல்' -என்ற ஒரு கதையை டிக் செய்திருக்கறதாக சொல்லப்படுகிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலிருந்து அந்தப் புதிய சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த சீரியலின் ப்ரோமோ விரைவில் விஜய் டிவியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gowthami Subramani February 27, 2023
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், தமிழ் மீது வீண் பழி போட்டு அவரை குடும்பத்தில் மாட்டி விடும் அர்ஜூன். இதனால், சேர்மன் பதவி யாருக்குக் கிடைக்கும். வீட்டை விட்டு தமிழ், சரஸ்வதி வெளியே சென்று விடுவார்களா..? அர்ஜூனின் பிளேன் நடந்து விடுமா..? அடுத்தடுத்த சுவாரஸ்யங்களைப் பற்றி இதில் காணலாம்.
Priyanka Hochumin February 24, 2023
முற்றிலும் புதுமையான கதையுடன் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் தற்போது வெறுப்பு, பழி வாங்கும் குணம், சண்டை என்று தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் இன்றைய எபிசொட் என்னவாக இருக்கும் என்று பாப்போம். ஆனால் அவளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர்களை ஜாமினில் வெளியே எடுக்கிறாள் கண்மணி. மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் அபி அடுத்து என்ன செய்ய போகிறாள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
Priyanka Hochumin February 24, 2023
தினமும் பல சுவாரஸ்யமான சம்பவங்களுடன் நடந்துக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பாப்போம். அண்ணனே வாழ்க்கை என்று வாழும் ஞானத்தை தன்னுடைய கடுமையான வார்த்தைகளால் காயப்படுத்துகிறான் குணசேகரன். அதனால் மனமுடைந்து கண்ணீர் விடும் ஞானம். தன்னுடைய மனைவி பிள்ளைக்கு என்ன செய்யப்போகிறேன் என்று வருந்துகிறான். இந்நிலையில் தன்னுடைய அண்ணனுக்கு ஆறுதலாக நிற்கிறான் சக்தி. குடும்பத்தில் இப்படி மாறி மாறி பிரச்சனை செய்வதால் வீட்டில் இருக்கும் அனைவரும் சோகத்தில் இருக்கின்றனர்.
Nandhinipriya Ganeshan February 23, 2023
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீசன் 2. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வரும் இதில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்திருந்தார். அவர் இரண்டாவது முறையாக கருவுற்றிருந்ததால், அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். இவரை வெகு சீக்கிரமாகவே ரசிகர்கள் சந்தியாவாக ஏற்றுக்கொண்டனர். அவரும் சந்தியா கதாபாத்திரத்தில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், இவரும் திடீரென கடந்த வாரம் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சந்தியா கதாபாத்திரத்தில் தற்போது ஆஷா கவுடா நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ராஜா ராணி 2 சீரியலில் இருந்து அதன் இயக்குநர் பிரவீன் பென்னட் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பிரபல சீரியல்களை இயக்கிய பிரவீன் இந்த சீரியலில் இருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக ரமேஷ் பாரதி என்பவர் ராஜா ராணி 2 சீரியலை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் ஆலியா மானசா விலகினார், அடுத்து வில்லியாக நடித்த விஜே அர்ச்சனா வெளியேறினார், கடந்த வாரத்தில் ரியா விஸ்வநாதன் விலகினார், இப்போது இயக்குநரும் விலகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Priyanka Hochumin February 21, 2023
தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தான். பெண்ணை மனிதராக பார்க்காமல் அடிமைப் போல நடத்தும் சமூகத்திற்கு புத்தி கூறும் வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள். தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக சக்தி பேசி அங்கிருந்து அவரை கூட்டிக் கொண்டு செல்கிறான். வீட்டில் இருக்கும் அனைவரும் வருத்தத்தில் சென்று விடுகின்றனர். குணசேகரன் அதே திமிருடன் எங்க போனாலும் என்கிட்ட தான் வந்தாகணும்னு நக்கலா பேசுகிறான்.
Nandhinipriya Ganeshan February 21, 2023
சினிமா பிரபலங்களை போல் இப்போது சீரியல் பிரபலங்களுக்கும் தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் இவர்களை ஏராளமானோர் பின்தொடர்ந்தும் வருகின்றார்கள். இந்தநிலையில், பாரதி கண்ணம்மா சீசன் 1 தொடரில் டாக்டர் பாரதியாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் இடம்பிடித்தவர் அருண் பிரசாத். இவருக்கு ஜோடியாக ரோஷினி ஹரிபிரியன் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கென்று தனிப்பெரும் ரசிகர் கூட்டம் இருந்துவந்தது. ஆனால், சீரியலில் இருந்து ரோஷினி விலகியதையடுத்து அவரது கதாபாத்தில் வினுஷா நடித்திருந்தார். இந்த ஜோடியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்குள் சீரியலே முடிந்துவிட்டது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.