அதிர்ச்சி.. பெட்டிக்குள் காதலி உடல்.. காதலனின் கொடூர செயல்..
Updated:
தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஷ்ரத்தா கொலையின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் இதேபோன்ற ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் தனது லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்து பெட்டிக்குள் அடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் ஷா (27) என்ற இளைஞர், மேகா தன் சிங் தோர்வி (35) என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு நலசோபரா பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டின் உரிமையாளரிடம் ஏற்கனவே இருவருக்கும் திருமணமாகிவிட்டதாக தெரிவித்ததால், அவரும் தங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று திடீரென்று அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அழுகிய நிலையில் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெட்டியில் மேகாவின் உடல் அழுகிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு, கொலை குறித்து விசாரணையை தொடங்கினர்.
மேலும், மேகாவை கொன்றுவிட்டு தப்பிக்க முயன்ற ஹர்திக் ஷாவையும் தேடி வந்தநிலையில் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், ஹர்திக் ஷாவிற்கு வேலை இல்லை என்பதால், அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு நடந்து வந்ததாகவும், ஆத்திரம் தாங்காமல் மேகாவை கொன்றதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது மேகா எப்போது கொல்லப்பட்டார் என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.