காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற இரண்டு பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அப்துல் ரஷீத்தின் வீட்டு வழியாக சென்ற இருவர் மதுபோதையில் இருந்து உள்ளனர். அப்போது அப்துல் ரஷீத்தின் வீட்டின் பூட்டை கல்லைக் கொண்டு உடைத்துக் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் அக்பர், கூச்சலிட்டு ஆக்கம் பக்கத்தினர் அழைத்து பூட்டை உடைத்துக் கொண்டிருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இருவருக்கும் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வேலூர் சார்புனாமேடு பகுதியை சேர்ந்த சிவராமன், காட்பாடி குமரப்பா நகர் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் என்பதும் மது போதையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவர் மீதும் காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இரவு நேரத்தில் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…