கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வசிப்பவர் கண்ணன். இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு அவர் சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வரும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தப்போது, கடையில் இருந்த பணம் மற்றும் பல பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக கண்ணன் கோட்டார் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் யார் என கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சாட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…