Nandhinipriya Ganeshan February 28, 2023
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள காகடியா மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் ப்ரீத்தி. இவர் கடந்த சில நாட்களாக தன்னுடன் பயிலும் மாணவிகளுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது, திடீரென இரவு நேர பயிற்சியின்போது மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில், மாணவி ப்ரீத்தி சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ந்துபோன சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Gowthami Subramani February 28, 2023
தலைநகர் டெல்லியில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Priyanka Hochumin February 28, 2023
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கார் ஒன்று வந்துள்ளது. அந்த தருணத்தில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற மூன்று 8 ஆம் வகுப்பு படிப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா மீது அந்த கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த மூன்று மாணவர்களும் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒன்றும் அறியாத வயதில் சாலையை கடக்க முயலும் போது கோர விபத்தில் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Nandhinipriya Ganeshan February 27, 2023
உத்திரப் பிரதேசம்: கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா (40). இவருக்கு திருமணமாகி ஆரவ், ஆர்யன் என்ற இரு மகன்கள் இருகின்றனர். அவதேஷ் மனைவி உயிரிழந்த நிலையில், 8 மாதத்திற்கு முன்னர் நீலம் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. திருமணத்திற்கு அவதேஷ் அவரின் இரு மகன்கள், நீலம் அவரது மகள் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு நீலம் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு போன் செய்து தனது கணவர் மற்றும் மகன்களை யாரோ ஒரு மர்ம கும்பல் கொலை செய்துவிட்டதாக புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு கழுத்து அறுக்கப்பட்டு இறந்துகிடந்த அவதேஷ் குப்தா மற்றும் அவரது மகன்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை மனைவி நீலம் மீது சந்தேகப் பார்வையை கொண்டு விசாரணை செய்தனர். அதன்படி, அப்பெண்ணிடம் 8 மணி நேரம் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது. அதாவது, அவதேஷ் குப்தா தனது சொத்தை முதல் மனைவியின் இரு மகன்களுக்கு தான் எழுதி வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார். தனது மகளுக்கும் தனக்கும் சொத்து தராமல் எப்படி அவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம் என்ற ஆத்திரத்தில் இவர்கள் மூவரையும் கொன்றுவிட்டால் சொத்து முழுவதும் தனக்கே வந்துவிடும் என்று சதி திட்டம் போட்டு மூவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். தற்போது கொலை வழக்குப் பதிவு செய்து நீலத்தை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்துக்காக 3 பேரின் உயிரை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gowthami Subramani February 27, 2023
ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு வந்த மெசேஜ் ஒன்றைக் க்ளிக் செய்ததால், ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இணைய மோசடிகள் வெகுவாக உயர்ந்து வருகின்றன. இதனால், பணம் உள்ளவர், இல்லாதவர் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் வசிக்கும் விவசாயி பவன் குமார் சோனி. இவரது மகன் ஹர்ஷ் வர்தன். ஹர்ஷ் தனது தந்தையின் வங்கிக் கணக்கில் தனது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்துள்ளார்.
Gowthami Subramani February 27, 2023
பிரபல ஹாங்காங் மாடல் அழகியான அபி சோய்-இன் காணாமல் போனதால் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது ஹாங்காங் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Nandhinipriya Ganeshan February 27, 2023
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழையபட்டியை சேர்ந்த கன்னியப்பன் - பழனியம்மாள் தம்பதியின் மகள் கார்த்திகா ஜோதி. 19 வயதான இவர் ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த கார்த்திகா ஜோதி கடந்த 21 ஆம் தேதி காலை, தான் தங்கியிருந்த விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்ததாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த விடுதி மற்றும் கல்லூரி ஊழியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குபதிவு செய்து மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
Priyanka Hochumin February 24, 2023
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செல்லியம்மன் கோயில் குளத்தில் மிதந்த உடல். இந்த சம்பவத்தின் குற்றமும் பின்னணியும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள். செல்லியம்மன் கோயில் குளத்தில், பிரவீன் குமாரின் உடல் மிதக்கும் நிலையில் கண்டறிந்தனர். பிரவீன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்பு அவர் கொலை செய்யப்பட்டு கோவில் குளத்தில் வீசப்பட்டது நிரூபணமானது. அ
Nandhinipriya Ganeshan February 23, 2023
பஞ்சாப் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் கண்முன்னாடியே ஒரு பெண்ணை ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கிய சம்பவம் அறங்கேறியுள்ளது. ஃபெரோஸ்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களை பிடிக்க முயற்சிக்கும் பொழுது இருசக்கர வாகனங்களில் ஏறி தப்பியோடிவிட்டனர். மேலும், தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் பட்டப்பகலில் அதுவும் போலீசார் கண்முன்னாடியே நடந்துள்ளது. பின்னர், இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் தாக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Priyanka Hochumin February 23, 2023
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முள்ளிகாடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த சிறுமியின் தந்தை மாங்கடையை சேர்ந்த 3 பேர் தான் தன்னுடைய மகளை கொலை செய்து விட்டதாக ஒருவர் கூறியதின் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது. அதில் கோவிந்தராஜ், மோகன்ராஜ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இப்போது மூன்றாவதாக வெங்கடேசன் என்பவரும் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்து தன்னுடைய மகளுக்கு நீதி வழங்கக் கோரி சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரை வலியுறுத்தி வருகிறார்.