Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்.. தந்தை, மகன் கைது!

Baskaran. S Updated:
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்.. தந்தை, மகன் கைது!Representative Image.

கன்னியாகுமரி: மணவாளக்குறிச்சி அருகே குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து
நர்சிங் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தந்தையையும் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60) வயதான இவரது மகன் சிவகுமார் (20) இவர் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள பைபர் படகு பழுது பார்க்கும் பட்டறையில் பணியாற்றி வருகின்றார்

இந்த நிலையில் சிவகுமார் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி நர்சிங் படித்து வரும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் பகுதியை சேர்ந்த 20 வயதான நாகேஸ்வரி என்ற தனது உறவுக்காற பெண்ணை தனது அக்கா மகளுக்கு பிறந்தநாள் என மணவாளக்குறிச்சியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு வைத்து சிவகுமார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து நாகேஸ்வரிக்கு கொடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். நாகேஸ்வரிக்கு மயக்கம் தெளிந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானப்படுத்தி சிவகுமார் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதற்கு பின் சிவகுமார் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து நாகேஸ்வரி தன்னை சிவகுமார் அவரது அக்கா குழந்தைக்கு பிறந்தநாள் என அழைத்து வந்து தன்னை ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தந்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து மாணவி நாகேஸ்வரியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் புகாரின் பேரில் சிவகுமார் மீது பெண்ணை ஏமாற்றி பாலாத்காரம் செய்தது திருமண செய்வதாக கூறி நம்பிக்கை மோசடி செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழுவும் உடந்தையாக அவரது தந்தை பால்ராஜ் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்