ஃபிரிட்ஜில் கால்கள்.! சூப்பில் விரல்கள்! மாடல் அழகி கொடூரக் கொலை.. வெளியான அதிர்ச்சித் தகவல்..

பிரபல ஹாங்காங் மாடல் அழகியான அபி சோய்-இன் காணாமல் போனதால் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது ஹாங்காங் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 

அபி சோய் மாடல் அழகியாக பேஷன் காட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தவர். இவருக்கு வயது 28. இவர் சமீபத்தில் எலி சாப் ஸ்பிரிங் சம்மர் 2023 கேட் கோச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் கடந்த இரண்டு நாள்களாகக் காணவில்லை என குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
 

இதன் ஒரு பகுதியாக, இவரது முன்னாள் மாமியார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில், இவரது துண்டான இரு கால்களும் குளிர்சாதனப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தீவிரமாகப் போலீசார் களமிறங்கியதில், வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்பில் இவரது கை விரல்கள் மற்றும் உடல் பாகங்கள் இருந்துள்ளது. மேலும், இவரது அடையாள அட்டை, கிரெடிட் கார்டு மற்றும் இன்னும் சில பொருள்கள் அவர்களது வீட்டில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

ஆனால், இவரது தலை இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் அவரது மாமியார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரது முன்னாள் கணவரும் தற்போது தேடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது கொலைகளைச் செய்து வீட்டின் ஃபிரிட்ஜில் வைப்பது டிரெண்டாகி விட்டது போல. இந்தியாவைத் தொடர்ந்து ஹாங்காங்கில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Show comments

தொடர்பான செய்திகள்

மதுபோதையில் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு பேர் - பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைப்பு.

பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - போலீசார் விசாரணை! .

காட்பாடி அருகே பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்: அச்சத்தில் பொதுமக்கள்..!.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்.. தந்தை, மகன் கைது!.