பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று.! என்ன தெரியுமா..? | Ponniyin Selvan Part 2 Preview

இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் பிரம்மாண்டமான இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1 கடந்த 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் வெளியானது. பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 28 ஆம் நாள் பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் 2 வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்திற்கான முன்னோட்டத்தை இந்தப் பதிவில் காணலாம்.

Ponniyin Selvan Cast விவரங்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் விவரங்களைக் காணலாம்.

விக்ரம் – ஆதித்த கரிகாலன்

ஐஸ்வர்யா ராய் – நந்தினி / ஊமை ராணி

ஜெயம் ரவி – அருள்மொழி வர்மன்

கார்த்தி – வந்தியதேவன்

த்ரிஷா கிருஷ்ணன் – குந்தவை

பிரபு – பெரிய வேலார்

சரத்குமார் – பெரிய பழுவேட்டரையர்

பார்த்திபன் – சின்ன பழுவேட்டரையர்

சோபிதா துலிபாலா – வானதி

ஐஸ்வர்யா லட்சுமி – பூங்குழலி

விக்ரம் பிரபு - பார்த்திபேந்திர பல்லவன்

பிரகாஷ் ராஜ் – சுந்தர சோழன்

ஜெயராம் – ஆழ்வார்க்கடியான் நம்பி

ஜெயசித்ரா – செம்பியன் மாதேவி

ரஹ்மான் – மதுராந்தகன்

அஸ்வின் ககுமானு – சேந்தன் அமுதன்

நாசர் – வீரபாண்டியன்

பொன்னியின் செல்வன் பாகம் 1

கல்கி அவர்களின் வரலாற்றுக் கதையான பொன்னியின் செல்வன் கதையைப் பற்றிக் காணலாம்.

சோழ தேசத்து முடி சூடா மன்னன் மற்றும் இளவரசன் ஆதித்ய கரிகாலன், சோழ தேசத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சூழ்ச்சிகள் சூழப்பட்டுள்ளது அறிகிறார். இதனை ஒரு மடலில் கடிதமாக எழுதி அதனை தனது நண்பனான வந்தியத் தேவனிடம் ஒப்படைத்து, சோழ தேசத்து இளவரசியும், ஆதித்ய கரிகாலனின் தங்கையுமான குந்தவையிடம் சேர்க்க வேண்டும் என கூறுகிறார்.

வந்தியத்தேவன் முக்கிய ஓலைகளை எடுத்துக் கொண்டு, பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து நந்தினி, பழுவேட்டரையரை போன்றோரைச் சந்தித்து பின் குந்தைவையிடம் கடிதத்தைச் சேர்க்கிறார். பதிலுக்குக் குந்தவை, வந்திய தேவனிடம் ஓலை ஒன்றைக் கொடுத்து, அதனை என் தம்பி அருள்மொழி வர்மனை சந்தித்து அவரிடம் ஒப்படைத்து விட்டு கையோடு தஞ்சை அழைத்து வர வேண்டும் என ஆணையிடுகிறார்.

பின், தஞ்சையை அடைந்த வந்திய தேவன், அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை கொடுத்த கடிதத்தை ஒப்படைக்கிறார். ஆனால், இலங்கையில் நடக்கும் பிரச்சனை ஒன்றின் காரணமாக அருள்மொழி வர்மன், தஞ்சைக்கு வர மறுக்கிறார். இதனிடையே, ரவிதாசனின் சூழ்ச்சியால் வந்தியத் தேவன் மற்றும் அருள்மொழிவர்மன் இருவரும் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். பின், மந்தாகினி (ஊமை ராணி), ஆபத்தில் சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் இரண்டாம் பாகத்தில் வெளிவர உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 முன்னோட்டம்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ரவிதாசனின் சூழ்ச்சியால் அருள்மொழி வர்மனைக் கொல்ல முயற்சி செய்த போது, அருள்மொழியைக் காப்பாற்றுகிறார் மந்தாகினி. சீனத் துறவிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த அருள்மொழிவர்மன், தந்தை சுந்தர சோழனின் கைது கட்டளையை ஏற்று சோழ தேசத்துக்கு வந்தாரா.? ஆதித்த கரிகாலனைக் கொல்ல நந்தினி போட்ட சதித்திட்டம் என்ன ஆனது என்பதை இந்த பாகத்தில் காணலாம்.

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.