ஹைதராபாத்: பிரபாஸ் நடிக்கும் கல்கி படக்குழுவிடம் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி ட்விட்ட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த பிரபாஸ் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. படத்தை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி மாஸ் ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகி மீண்டும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்த்திருக்கிறார் பிரபாஸ்.
இந்தச் சூழலில் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இதில் பிரபாஸ் மட்டுமின்றி கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் கமிட்டாகியிருக்கின்றனர். படத்துக்கு முதலில் புராஜெக்ட் கே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. கமல் ஹாசன் வில்லனாக இதில் நடிப்பதற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
புராஜெக்ட் கே என்று அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்த பாகுபலி இயக்குநர் ராஜமௌலி அதனை பாராட்டி படக்குழுவிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகப்பெரிய வேலை நாகி மற்றும் வைஜெயந்தி மூவிஸ். ஒரு உண்மையான எதிர்காலத்தை நோக்கிய திரைப்படத்த உருவாக்குவது ரொமப்வே கடினம். அதை சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரே ஒரு கேள்வி மட்டும் மிச்சம் இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி எப்போது” என குறிப்பிட்டிருக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…