ஹைதராபாத்: பிரபாஸ் நடிக்கும் கல்கி படக்குழுவிடம் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி ட்விட்ட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார். பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த பிரபாஸ் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. படத்தை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி மாஸ் ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகி மீண்டும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்த்திருக்கிறார் பிரபாஸ். இந்தச் சூழலில் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இதில் பிரபாஸ் மட்டுமின்றி கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் கமிட்டாகியிருக்கின்றனர். படத்துக்கு முதலில் புராஜெக்ட் கே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. கமல் ஹாசன் வில்லனாக இதில் நடிப்பதற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. புராஜெக்ட் கே என்று அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்த பாகுபலி இயக்குநர் ராஜமௌலி அதனை பாராட்டி படக்குழுவிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகப்பெரிய வேலை நாகி மற்றும் வைஜெயந்தி மூவிஸ். ஒரு உண்மையான எதிர்காலத்தை நோக்கிய திரைப்படத்த உருவாக்குவது ரொமப்வே கடினம். அதை சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரே ஒரு கேள்வி மட்டும் மிச்சம் இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி எப்போது” என குறிப்பிட்டிருக்கிறார்.
நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவி பவித்ரா, சோப்பில் புத்தர் சிலை, விநாயகர் சிலை, ஆமை, மீன், பூக்கள் என பல்வேறு வடிவங்களை அமைத்து அசத்தி வருகிறார். கழிவு பொருட்களை தூக்கி வீசாமல் உபயோக பொருளாக மாற்றும் புதுமையான முயற்சியில் இளைய தலைமுறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், வீட்டில் குளிக்க பயன்படுத்தும் நறுமண சோப்பில் வித விதமான அலங்கார பொருட்களை தன்னுடைய கைவண்ணத்தில் உருவாக்கி பிரம்மிக்க வைக்கிறார் கல்லூரி மாணவி ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகள் பவித்ரா, படிக்கும் போதே ஓவியங்கள் வரைவது சின்ன வண்ண பேப்பரில் மலர்கள் செய்து ரசிப்பது என அவரது பொழுதுபோக்காக இருந்தது. குறிப்பாக அதிக அளவில் சாமி படங்களை ஓவியங்களாக வரைந்து உள்ளார். நறுமண சோப்பில் ஏதாவது பொருட்கள் செய்யலாம் என கல்லூரி மாணவிக்கு எண்ணம் தோன்றியது. இதனைத் தொடர்ந்து நறுமண சோப்பில் புத்தர் சிலையை செய்ய தொடங்கினார். வீட்டில் இருக்கும் நேரத்தில் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் புத்தர் சிலையை வடிவமைத்துள்ளார். சோப்பில் புத்தர் சிலை செய்த பிறகு வெள்ளை நிற சோப்பில் விநாயகர் சிலை, ஆமை, மீன், பூக்களையும் உருவாக்கி உள்ளார். இந்த வடிவத்தை உருவாக்க கத்தியை உளியாக பயன்படுத்தி உள்ளார் கல்லூரி மாணவி. சோப்பின் வாசனையும் நறுமணமாக இருந்ததால் அதில் பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் செய்ய துவங்கினார். இந்த பொருட்களை வீட்டில் அலங்காரமாகவும் வைத்துள்ளார். இதனால் வீட்டுக்குள் எப்போதும் நறுமணம் வீசியபடி இருக்கும் இதுபோல் பிற பொருட்களிலும் திறமைகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார். கோவில் திருவிழா மட்டும் கடற்கரைக்கு நண்பர்களுடன் செல்லும்போது அரிசி சாக்பீஸ் ஆகியவற்றில் பெயர் எழுதுவதை பார்த்து அவற்றிலும் பல்வேறு பொருட்களை வடிவமைக்க துவங்கினார். பொன்னி அரிசி, பிரியாணி அரிசி போன்றவற்றில் பெயர்கள் எழுதுவது ஓவியம் வரைவது போன்ற செயல்பாட்டிலும் மாணவி ஈடுபட துவங்கினார். வெள்ளை பேப்பரில் காகித பொம்மைகள் குங்கும சிமிழ். பெண் பொம்மை பாண்டா கரடிகள் ஆகியவற்றின் உருவாக்கி உள்ளார் அதில் பினியன் பொம்மையை விரும்பி செய்துள்ளார். கல்லூரி மாணவி பவித்ராவின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மஞ்சள் கலர் ஜெர்சியை மறந்து, ப்ளூ கலர் டீ-சர்ட்டிற்கு மாறி ஆதரவு அளிப்போம் என்று லைக்கா கோவை கிங்ஸ் விளம்பர தூதுவரும் நடிகருமான சதீஷ் தெரிவித்துள்ளார். நடப்பாண்டிற்கான தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று மதுரை மற்றும் கோவை லைக்கா கிங்ஸ் அணிகள் மோதின.
கேஜிஎஃப் படத்தில் நடித்து புகழடைந்த யஷ் மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார். களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர் யாஷ். திரையுலகில் நிலைத்து நிற்க பல வருடங்கள் போராடிய யாஷுக்கு எந்த படமும் பிரேக் கொடுக்காமல் இருந்தது. இருப்பினும் தனது விடா முயற்சியை அவர் விடவே இல்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தார். எப்படியாவது திரையுலகில் பெரிய ஸ்டாராக வேண்டுமென்ற வேட்கை அவரிடம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது.
நடிகை அனிகா பெட்ரூமிலிருந்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அவருக்கும், அஜித்துக்குமான காட்சி பலரையும் கலங்க வைத்தது.
ஆதிபுருஷ் பட டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும் என சக்திமான் நாடகத்தில் நடித்த முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து படம் ஆதிபுருஷ் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமராக பிரபாஸ், ராவணனாக சைஃப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோனி நடித்திருக்கின்றனர். படம் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு படம் பார்க்க ரசிகர்கள் சென்ரன. ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகளோ ரொம்பவே மோசமாக அமைந்து விட்டதென்று ரசிகர்கள் ஓபனாகவே கூறினர்.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரோஹினி, கமலா திரையரங்குகலில் நாளை முழுவதும் விஜய் திரைப்படஙக்ள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கலவையான விமர்சனம் விஜய்க்கு ரொம்பவே அப்செட் என கூறப்படுகிறது. எனவே கட்டாயம் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். எனவே அந்த இரண்டு படங்களிலும் விட்டதை பிடிக்க லியோ படத்தை நம்பியிருக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் திரை நட்சத்திரங்கள் பலர் களமிறங்கியிருக்கின்றனர்.
லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வரும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். வாரிசு கொடுத்த சூட்டை இதில் தணித்துக்கொள்ள அவர் முனைந்திருப்பதாலும், மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்குவதாலும் லியோ நிச்சயம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கிவருவதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் நா ரெடிதா வரவா பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். வாரிசு கொடுத்த சூட்டை இதில் தணித்துக்கொள்ள அவர் முனைந்திருப்பதாலும், மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்குவதாலும் லியோ நிச்சயம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கிவருகிறார். படத்தில் விஜய்க்கு இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது.
தனக்கு கொடுத்த சம்பளத்தை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த்துக்கு கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் தொடர்பான் ஃப்ளாஷ்பேக். இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே.