தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடக்கம்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!
Updated:
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்ட நிலையில், இன்று முதல் தமிழகத்தில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளையும் பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக மின்சார வாரியம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதை ஆன்லைனிலும் தாங்களே மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆன்லைனில் இணைத்த்துக் கொள்ள முடியாதவர்களின் வசதிக்காக மின்வாரிய அலுவலகங்களில் இன்று முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? எளிமையான வழிமுறைகள்..
பண்டிகை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும் நிலையில், பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ளுமாறு தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.