Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
104.99sensex(0.14%)
நிஃப்டி22,055.70
32.35sensex(0.15%)
USD
81.57

இந்தியா

இந்திய விடுதலைக்காக போராடிய தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் பெயர்கள்.. | Tamil Nadu Freedom Fighters Name List in Tamil

Nandhinipriya Ganeshan August 14, 2023

நமது இந்தியாவில், விடுதலைக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடினர். நூற்றுக்கணக்கான தலைவர்கள் அவர்களை முன்னடத்திச் சென்றனர். இருப்பினும் கூட, தேசிய அளவில் வட இந்திய போராளிகளுக்கு கிடைத்த பெயர், தென்னிந்தியா போராளிகளுக்கு கிடைக்கவில்லை என்பது தான் மறைக்கப்பட்ட உண்மை. ராணி லட்சுமி பாய் அம்மையாருக்கு முன்பே, தமிழகத்தில் வீர மங்கை வேலு நாச்சியார், ஒரு பெண்மணியாக இருந்து ஆங்கிலேயரை எதிர்த்து போராடினர். தனது சொத்துகளை விற்று வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த வ.உ.சி, தனது வரிகளால் ஆங்கிலேயனை கிழித்தெறிந்த பாரதி, தீரன் சின்னமலை என இந்த பட்டியல் நீள்கிறது. இவர்களில் பலரை பற்றி இன்றைய இளைய சமூதாயம் கட்டாயம் நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டும். தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்கள்: 1. மகாகவி பாரதியார் 2. திருப்பூர் குமரன் 3. வீர மங்கை வேலுநாச்சியார் 4. வாஞ்சிநாதன் 5. வீரபாண்டிய கட்டபொம்மன் 6. வ.உ.சிதம்பரம்பிள்ளை 7. தீரன் சின்னமலை 8. சுப்பிரமணிய சிவா 9. மருது பாண்டியர் 10. புலித்தேவர் 11. காசுலு லட்சுமிநரசு செட்டி 12. ஜி.சுப்ரமணிய ஐயர் 13. சி.ராஜகோபாலாச்சாரி 14. கே.காமராஜர் 15. ஆர்.சீனிவாசன் 16. சத்தியமூர்த்தி

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்! | Freedom Fighters Names in Tamil

Nandhinipriya Ganeshan August 14, 2023

நமது இந்தியா பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, அதன் வரலாற்றிலும் சிறப்பு வாய்ந்தது. வளங்களால் நிரம்பி வழிந்த இந்தியாவை அந்த காலத்தில் 'தங்கப் பறவை' என்று அழைத்தனர். ஆங்கிலேயர்கள் சுமார் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டனர். என்ன தான் அவர்களின் ஆதிக்கம் ஓங்கி இருந்திருந்தாலும், இந்தியாவின் செல்வமும் கம்பீரமும் உலகம் முழுவதிலுமிருந்து எதிரிகளை ஈர்த்தது. நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதற்காக ஏராளமான வீரர்கள் போராடினர். சிலர் தங்கள் இரத்தத்தையும், உயிரையும் நாட்டின் சுதந்திரத்திற்காகவே தியாகம் செய்தனர். அவ்வாறு நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 15, 1947 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே டெல்லியில் உள்ள இந்தியா கேட் கட்டப்பட்டது. தற்போது நாட்டின் 72வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு இன்னல்கள், போராட்டங்களுக்கு இடையே சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்த தேசத்தலைவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம். 1. சர்தார் வல்லபாய் படேல் 2. மகாத்மா காந்தி 3. சுபாஷ் சந்திர போஸ் 4. டாக்டர் ராஜேந்திர பிரசாத் 5. நானா சாஹிப் 6. பகத் சிங் 7. மங்கள் பாண்டே 8. ஜவஹர்லால் நேரு 9. லால் பகதூர் சாஸ்திரி 10. லாலா லஜபதி ராய் 11. பாலகங்காதர திலகர்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம்.. தமிழக அரசின் அருமையான திட்டம்.. | Nammai Kaakkum 48 Scheme Details in Tamil

Nandhinipriya Ganeshan August 09, 2023

சமீப காலமாகவே சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதை குறைத்திடும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இந்த "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்". இந்த திட்டத்தின் முக்கிய அங்கமே சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதாகும். இந்த முதன் முதலில் 18.12.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தக் கட்டுரையில், நம்மை காக்கும் 48 திட்டத்தின் முழு விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். நம்மை காக்கும் 48 திட்டம்! சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இலவச மருத்துவ திட்டத்தின் மூலம் விபத்தில் பாதிக்கப்படும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. அதன்படி அதிகமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும் 204 அரசு மற்றும் 405 தனியார் மருத்துவமனைகள் என மாநிலம் முழுவதும் 609 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள், பல்வேறு விவரங்கள் தேவைப்பட்டன. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட நபர் மருத்துவச் சேவை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்ட நபர் அவருடைய பணிகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும். தற்போது அவையெல்லாம் இல்லாமல் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். விபத்து நடந்தவுடன் எந்தவித தாமதமும் இல்லாமல் விபத்தில் சிக்கியவர்களைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதும், அவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும், நோயாளியின் தேவையற்ற இடமாற்றத்தை தவிர்ப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். 48 மணிநேரத்திற்கு மேல் சிகிச்சை: இத்திட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் (81 treatment Packages) சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின்வரும் மூன்று வழிகாட்டுதல்களின்படி சிகிச்சைகள் வழங்கப்படும், 1. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம். 2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையைக் கட்டணமில்லாமல் தொடரலாம். 3. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லத் தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சையைப் பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையைத் தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.

பக்தர்கள் அதிர்ச்சி...திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்...கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

Priyanka Hochumin August 05, 2023

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை சுவர் இடிந்து விழுந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பெருமாள் கோவில் தலமாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் மொத்தம் 108 வைணவத் திருத்தலங்களைக் கொண்டுள்ளது. இதில் முதல் தலமானது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இந்த கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றம் இரண்டாம் நிலை சுவர்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் | ITR Filing Last Day Today

Priyanka Hochumin July 31, 2023

2022 - 23 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய (ஜூலை 31, 2023) இன்று தான் கடைசி நாள். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்யும் செயல்பாடு நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் கடைசி நாள் வரை தாக்கல் செய்யாமல் இருப்பது மக்களின் அலட்சியத்தை தெரிய படுத்துகிறது. நாடு முழுவதும் நேற்று மாலை வரையில் 6 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். இதில் நேற்று ஒரு நாள் மட்டும் 26 லட்சத்து 76 ஆயிரம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யபட்டதாக வருமான வரி துறையினர் அறிவித்துள்ளனர்.

தங்கத்தை விட தக்காளி விலை அதிகமா இருக்கே...ஒரு கிலோ 200 ரூபாயாம்!

Priyanka Hochumin July 31, 2023

சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200/- என்பதால் மக்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்கின்றனர். விலை வாசி அதிகரித்து வரும் நிலையில் தங்கம் வாங்க தான் மக்கள் அச்சப்படும் சூழலை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்போது தினசரி சமையலுக்கு அத்தியாவிசியமாக இருக்கும் காய் கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை பயங்கர உச்சத்தில் இருக்கிறது. கடந்த வாரம் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150/- விற்கப்பட்டுள்ளது.

சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்.. எப்போதிலிருந்து..? | Chennai to Bengalore Bullet Train

Nandhinipriya Ganeshan July 27, 2023

புல்லட் ரயில் என்றாலே ஜப்பான், சீனா போன்ற பெரும்நகரங்கள் தான் நம்மில் பலருக்கும் நினைவிற்கு வரும். இதற்கிடையில், நமது நாட்டிற்கும் புல்லட் ரயில் வருமா என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த ஏக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. அதாவது, மும்பை டூ அகமதாபாத் வழித்தடத்தில் 508 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் இயக்க அடித்தளம் போடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் நிதியுதவி உடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் காரணமாக காலதாமதம் ஆன நிலையில் தற்போது பிரச்சினைகள் ஓரளவுக்கு முடிந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, வரும் ஆகஸ்ட் 2026க்குள் இந்தியாவில் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையை மும்பை - அகமதாபாத் வழித்தடம் பெறவுள்ளது. இதையடுத்து பிற நகரங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும். இதற்காக மத்திய அரசு தற்போதே திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அவற்றில், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில் சேவையும் உள்ளது. தற்போது, சென்னை டூ மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டில் உள்ளது. இது பெங்களூரு வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புல்லட் ரயிலும் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் சேவை 2051 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் வகையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது. அப்படி பயன்பாட்டிற்கு வந்தால் தென்னிந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையை பெறும்.

பெண்கள் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்: முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு....!

Baskaran. S July 21, 2023

சென்னை: பெண்கள் தன்னம்பிக்கையோடு, திறன்களை வளர்த்துக் கொண்டு சமூகத்தில் மேம்பட வேண்டும் என முன்னாள் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்ய பவன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவள் முன் முயற்சி, பெண் மற்றும் பெண் அனுபவங்கள் என்ற தலைப்பில் 3 பாகங்கள் கொண்ட புத்தகங்களை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வாய்ப்பு கிடைத்ததால் 70 சதவீதம் கல்லூரி மாணவிகள் தங்க பதக்கம் வாங்குகின்றனர். இந்திய பெண்கள் போர் வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வாழ்க்கை திறன்களை பற்றியும்,  கல்வி, சுகாதாரம், பாதுகாப்பான சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகள் பற்றியும், குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் உள்ள பெண்களுக்கு திறன்கள் மிகவும் இன்றியமையாததாகிறது. ஒருவருடைய வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமானது ஒன்று.  தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், அதிக ஸ்திரத்தன்மையை கொண்டு வரவும், அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், சமூகங்களை மேம்படுத்தவும் இது அவர்களுக்கு உதவுகிறது. இன்றும் சாதி அடிப்படையில் பாகுபாடு உள்ளது. இந்தியாவில் 19 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், 20 சதவீதம் பேர் எழுத்தறிவு இல்லையென்றும், அடிப்படை திறமைகளை பெண்கள் வளர்த்து கொண்டால் ஆண்களை சார்ந்து இருக்காமல் பொருளாதார ரீதியாக மரியாதையுடன் வாழ்க்கையில் உயரலாம்.  கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது கருணையோ, சேவையோ கிடையாது அது அவர்களுக்கான உரிமையாகும். தற்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்காக அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். பெண்கள் மரியாதையோடு, உரிய வாய்ப்பும் வழங்க வேண்டும். இந்தியா உலகில் 5 இடத்தில் பொருளாதார இடத்தில் இருக்கும் நான் விரைவில் 3வது இடத்தில் உள்ளோம், ஆகையால் பெண்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும். ராணி அஹில்யா பாய் ஹோல்கர், ராணி துர்காவதி, ராணி ஜிஜா பாய், ரசியா சுல்தானா & ராணி வேலு நாச்சியார் போன்ற வீர பெண்கள் வரலாறு நிறைந்தவையாக இந்திய வரலாறு உள்ளது என சுட்டிக்காட்டி, பெண்கள் மத்தியில் ஊக்கப்படுத்தி உரையாற்றினார்.

தண்ணீர் தொட்டில் தவறி விழுந்த குழந்தை பலி - தாயார் தூங்கி கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்

selvarani July 21, 2023

தண்ணீர் தொட்டில் தவறி விழுந்த குழந்தை பலி - தாயார் தூங்கி கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம் மேலூர் அருகே வீட்டினுள் குழந்தையின் தாய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிப்பட்டியைச் சேர்ந்த மதுக்குமார்- ராஜசுதா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மூன்றாவதாக ஒன்றரை வயதில் ஹரிபிரசாத் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மதுகுமார் வெளியே சென்ற நிலையில், அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ராஜசுதா வீட்டு வேலைகளை முடித்து விட்டு குழந்தை ஹரிபிரசாத்துடன் தூங்கி உள்ளார். அப்போது, தூக்கத்தில் இருந்து எழுந்த ஹரிபிரசாத் வீட்டின் முன் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜசுதா குழந்தையை காணாமல் தேடிய நிலையில், குழந்தை ஹரிப்பிரசாத் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஹரிபிரசாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர். உயிரிழந்த குழந்தை ஹரிப்பிரசாத்தை ராஜசுதா மடியில் போட்டு கதறி அழுதது, காண்போரை கண் கலங்க வைத்தது. இதுகுறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர்தொட்டியில் தவறிவிழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவு.. 10பேர் பலி..

Baskaran. S July 20, 2023

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கும் பகுதியான இர்சல்வாடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.  இதனால் அந்த பகுதியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தன. தகவல் அறிந்ததும் 150 மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் 500 மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை ஆய்வு செய்தார். மீட்பு பணிக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.