Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,952.94
-53.00sensex(-0.07%)
நிஃப்டி22,513.60
11.60sensex(0.05%)
USD
81.57
Exclusive

பக்தர்கள் அதிர்ச்சி...திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்...கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

Priyanka Hochumin Updated:
பக்தர்கள் அதிர்ச்சி...திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்...கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!Representative Image.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை சுவர் இடிந்து விழுந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய பெருமாள் கோவில் தலமாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் மொத்தம் 108 வைணவத் திருத்தலங்களைக் கொண்டுள்ளது. இதில் முதல் தலமானது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இந்த கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றம் இரண்டாம் நிலை சுவர்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பழுதடைந்த சுவர் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக கோபுரத்தில் இருந்த சில சிற்பங்கள் சிதைந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்