நமது இந்தியாவில், விடுதலைக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடினர். நூற்றுக்கணக்கான தலைவர்கள் அவர்களை முன்னடத்திச் சென்றனர். இருப்பினும் கூட, தேசிய அளவில் வட இந்திய போராளிகளுக்கு கிடைத்த பெயர், தென்னிந்தியா போராளிகளுக்கு கிடைக்கவில்லை என்பது தான் மறைக்கப்பட்ட உண்மை. ராணி லட்சுமி பாய் அம்மையாருக்கு முன்பே, தமிழகத்தில் வீர மங்கை வேலு நாச்சியார், ஒரு பெண்மணியாக இருந்து ஆங்கிலேயரை எதிர்த்து போராடினர். தனது சொத்துகளை விற்று வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த வ.உ.சி, தனது வரிகளால் ஆங்கிலேயனை கிழித்தெறிந்த பாரதி, தீரன் சின்னமலை என இந்த பட்டியல் நீள்கிறது. இவர்களில் பலரை பற்றி இன்றைய இளைய சமூதாயம் கட்டாயம் நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்கள்:
1. மகாகவி பாரதியார்
2. திருப்பூர் குமரன்
3. வீர மங்கை வேலுநாச்சியார்
4. வாஞ்சிநாதன்
5. வீரபாண்டிய கட்டபொம்மன்
6. வ.உ.சிதம்பரம்பிள்ளை
7. தீரன் சின்னமலை
8. சுப்பிரமணிய சிவா
9. மருது பாண்டியர்
10. புலித்தேவர்
11. காசுலு லட்சுமிநரசு செட்டி
12. ஜி.சுப்ரமணிய ஐயர்
13. சி.ராஜகோபாலாச்சாரி
14. கே.காமராஜர்
15. ஆர்.சீனிவாசன்
16. சத்தியமூர்த்தி
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…