நமது இந்தியா பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, அதன் வரலாற்றிலும் சிறப்பு வாய்ந்தது. வளங்களால் நிரம்பி வழிந்த இந்தியாவை அந்த காலத்தில் 'தங்கப் பறவை' என்று அழைத்தனர். ஆங்கிலேயர்கள் சுமார் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டனர். என்ன தான் அவர்களின் ஆதிக்கம் ஓங்கி இருந்திருந்தாலும், இந்தியாவின் செல்வமும் கம்பீரமும் உலகம் முழுவதிலுமிருந்து எதிரிகளை ஈர்த்தது. நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதற்காக ஏராளமான வீரர்கள் போராடினர். சிலர் தங்கள் இரத்தத்தையும், உயிரையும் நாட்டின் சுதந்திரத்திற்காகவே தியாகம் செய்தனர்.
அவ்வாறு நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 15, 1947 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே டெல்லியில் உள்ள இந்தியா கேட் கட்டப்பட்டது. தற்போது நாட்டின் 72வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு இன்னல்கள், போராட்டங்களுக்கு இடையே சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்த தேசத்தலைவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்.
[31 அக்டோபர் 1875 - 15 டிசம்பர் 1950]
வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவவர்களுள் ஒருவராக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய அங்கம் வகித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி என்று புகழப்படுகிறார். ஐந்நூறுக்கும் மேற்பட்ட சமஸ்தாங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதால் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல்.
[2 அக்டோபர் 1869 - 30 ஜனவரி 1948]
இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாட்டின் விடுதலைக்கு வழிகோலிய காந்தியடிகள் உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் பெரிதும் கவரப்பட்டார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம், கதர் உடை, சைவ உணவு, பொய் கூறாமை, அசிம்சை ஆகியவை காந்தியடிகள் உறுதியாக பின்பற்றிய கொள்கைகள். மகாத்மா காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை நூலான சத்திய சோதனை உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
[23 ஜனவரி 1897 - 18 ஆகஸ்ட் 1945]
நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரிசாவில் பிறந்தவர். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை தனி வழியில் நடத்திச்சென்றவர். 25வது வயதில் லண்டனில் படிப்பை முடித்துத் திரும்பிய நேதாஜியை சித்தரஞ்சன் தாஸ் தான் நிறுவிய தேசியக் கல்லூரிக்கு தலைராக நியமித்தார். லண்டனில் படித்தபோது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் அறிந்திருந்த நேதாஜி கல்லூரி மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டும் உரைகள் ஆற்றினார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை (INA) உருவாக்கினார். அப்படை மூலம் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்.
[3 டிசம்பர் 1884 - 28 பிப்ரவரி 1963]
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சுதந்திர நாட்டின் முதல் குடியரசுத் தலைவருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிகவும் முக்கியமானவர். மகாத்மா காந்தியின் தீவிர வழக்கறிஞராக இருந்த, இவர் 1947, 1950 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பணியாற்றினார். தொடர்ந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய ஜனாதிபதிகளில் இவரும் ஒருவர். அவர் சுதந்திர இயக்கத்தின் போது சர்ச்லைட் மற்றும் தேஷ் ஆகியவற்றிற்காக பணம் திரட்டினார். 1962 ஆம் ஆண்டில் பிரசாத் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னாவையும் பெற்றார்.
[19 மே 1824 – 1859]
பிரிட்டன் கம்பேனி ஆட்சிக்கு எதிராக நடந்த 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர். பித்தூரை தலைமயிடமாகக் கொண்டு மராத்திய அரசை நடத்தியவர். மராத்திய பேரரசின் பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் பிள்ளையான நானா சாகிப், 1857 கிளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். படையில் உயிர் பிழைத்தவர்களைக் கொன்று, கான்பூரில் பிரிட்டிஷ் வீரர்களை முறியடித்து, பிரிட்டிஷ் முகாமை அச்சுறுத்தினார். துணிச்சலான மற்றும் திறமையான நிர்வாகியாக இருந்த, அவர் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களை ஒழுங்கமைத்து மேற்பார்வையிட்டார். 1857 சிப்பாய்க் கிளர்சிக்குப் பின் பிரித்தானிய இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிக்க தலைமறைவாகி விட்டார்.
[28 செப்டம்பர் 1907 - 23 மார்ச் 1931]
தீவிர இந்திய விடுதலைப் போராளிகளில் ஒருவரான இவர் தனது தேசத்திற்காக ஒரு பெருமைமிக்க தியாகியாக இறந்தார். செப்டம்பர் 28, 1907 அன்று, பாகிஸ்தானின் பங்கா நகரில் பிறந்த இவர், 1921 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். பஞ்சாபி இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்க, அவர் " நௌஜவான் பாரத் சபா "வை நிறுவினார். சௌரி-சௌரா படுகொலை அவரை முற்றிலும் மாற்றியது. பின்னர், லாலா லஜபதி ராயின் மறைவுக்கு பழிவாங்கும் விதமாக 1928 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் போலீஸ் சூப்பிரண்டு ஜேம்ஸ் ஸ்காட்டைக் கொல்லும் சதியில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. மார்ச் 23, 1931 அன்று, ஆங்கிலேயர்கள் இந்த வீர இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை பாகிஸ்தானின் லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிட்டனர். அப்போது அவருக்கு வயது 23 மட்டுமே. அவர் ஷாஹீத் பகத் சிங் என்ற பெயரில் நன்கு அறியப்பட்டவர். 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற வார்த்தையை பிரபலப்படுத்தினார், அது இறுதியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கீதமாக மாறியது.
[19 ஜூலை 1827 - 8 ஏப்ரல் 1857]
1827 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டே, நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரராக போற்றப்படுகிறார். கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தின் 34வது வங்காள பூர்வீக காலாட்படை படைப்பிரிவில் ஒரு சிப்பாயாக, அவர் சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்த போதிலும், சிப்பாய்களுக்குக் கொடுக்கப்பட்ட தோட்டாக்கள் பன்றிக் கொழுப்புடன் உயவூட்டப்பட்டவை என்பதை அறிந்ததும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கலகம் செய்தார். முதல் முறையாக, மங்கள் பாண்டே "மாரோ ஃபிரங்கி கோ" என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தி இந்தியர்களை ஊக்கப்படுத்தினார். அவரது எழுச்சி முதல் விடுதலைப் போராட்டத்திற்கு மிகவும் அடித்தளமாக அமைந்தது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்றும் அழைக்கப்படும் 1857 பெரும் கிளர்ச்சியான இந்தியக் கலகத்தைத் தொடங்க இளம் இந்திய வீரர்களை ஊக்குவித்த ஆரம்பகால கிளர்ச்சியாளர்களில் இவரும் ஒருவர்.
[14 நவம்பர் 1889 - 27 மே 1964]
இந்தியாவின் முதல் பிரதமாரன நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படுகிறார். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு இளம் வயதிலேயே காங்கிரஸின் இடதுசாரித் தலைவரானார். 1920ஆம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக முதல் முறையாக சிறை சென்றார். தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையிலேயே கழித்தார். சிறையில் இருந்த நாட்களில் உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
[2 அக்டோபர் 1904 - 11 ஜனவரி 1966]
லால் பகதூர் சாஸ்திரி 1904 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் முகல்சராய் நகரில் பிறந்தார். காசி வித்யாபீடத்தில் தனது படிப்பை முடித்ததும் " சாஸ்திரி " என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் மகாத்மா காந்தி தலைமையிலான உப்பு சத்தியாகிரகப் பிரச்சாரம், ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் அமைதியான ஆனால் தீவிரமான விடுதலைப் போராளியாகச் சேர்ந்தார். 1964 இல் இந்தியாவின் இரண்டாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் சுதந்திரத்தின் போது உள்துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார். "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என்ற மிகவும் பிரபலமான சொற்றொடர் 1965 ஆம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்டது.
[28 ஜனவரி 1865 - 17 நவம்பர் 1928]
"பஞ்சாப் கேசரி" என்றும் அழைக்கப்படும் லாலா லஜபதி ராய் , ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் தேசிய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவர் இந்திய தேசிய காங்கிரஸின் தீவிர உறுப்பினராகவும் இருந்தார். 1894 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர். அவர் 1885 இல் லாகூரில் தயானந்த் ஆங்கிலோ-வேதிக் பள்ளியை நிறுவினார். இந்திய ஹோம் ரூல் லீக் ஆஃப் அமெரிக்கா 1917 இல் நியூயார்க்கில் அவரால் நிறுவப்பட்டது. தங்கள் நாட்டுக்கு சேவை செய்ய 1921 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள பூர்வீக மிஷனரிகளை ஆட்சேர்ப்பு மற்றும் கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் மக்கள் சேவகர்கள் சங்கத்தை நிறுவினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை , ரவுலட் சட்டம் மற்றும் வங்கப் பிரிவினைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். அவர் 1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் போராட்டத்தின் போது கடுமையான பிரிட்டிஷ் லத்தி சார்ஜ்க்குப் பிறகு இறந்தார்.
[23 ஜுலை 1856 - 1 ஆகஸ்ட் 1920]
இந்தியத் தேசியவாதி, சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் என பல விதங்களில் அறியப்படுபவர். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் ‘லோகமான்ய’ கௌரவப் பெயரையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் நினைவுகூரப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…