ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்றும் கிராமிற்கு 14 ரூபாய் அளவிற்கு உயர்ந்து நடுத்தர மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராம் 5,056 ரூபாய்க்கும், சவரன் 40,448 ரூபாய்க்கும் விற்பனை நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 5,070 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 40,560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 14 ரூபாய் அதிகரித்து 5,472 ரூபாய்க்கும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 43,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை ஆபரணத் தங்கத்தைப் போலவே ஆபரண வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 10 காசுகள் அதிகரித்து, 73 ரூபாய் 10 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 100 ரூபாய் உயர்ந்து 73,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் அமெரிக்க, ஐரோப்பாவில் உள்ள மத்திய வங்கிகள் கடந்த வாரம் தனது வட்டி விகிதத்தை உயர்த்தின, இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை மளமளவென உயர்ந்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…