Priyanka Hochumin July 28, 2023
தற்போது டிஜிட்டல் கரன்சி பயன்படுத்துவதில் இந்தியா படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் அதனை மேம்படுத்தும் வகையில் eRupee மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை (CBDC) பயன்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. மேலும் கூடிய விரைவில், இந்தியாவில் யுபிஐ க்யூஆர் குறியீடுகள் மூலம் சிபிடிசி பேமெண்ட்டுகளை எளிதாக்கும் செயல்பாடுகளை கொண்டு வர இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தயாராக உள்ளது.
சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவுக்கான சேவை கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாகவும், ஜூலை 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று வணிக வரி மற்றும் சேவை வரி செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைக்கான கட்டணங்கள் கடந்த 20வருடங்களுக்கும் மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவணப் பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து நகல் வழங்குதல் போன்ற சேவைக்கான பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பதிவுச்சட்டம் 1908, பிரிவு 78-ன் கீழ் கட்டண விவர அட்டவணையில் உள்ள 20 இணங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவண பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ரசீது ஆவணத்திற்கு பதிவுக் கட்டணம் ரூ.20லிருந்து ரூ.200ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், அதிகப்பட்ச முத்திரை ஆவண தீர்வை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதேபோல் தனிமனித கட்டணம் ரூ.200லிருந்து ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு ரூ.10ஆயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு 1சதவீதம் என மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த கட்டண உயர்வு வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயனர்கள் காத்திருந்த அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day) சலுகை விற்பனை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் அதிரடி தள்ளுபடிகளை நாம் பெறலாம்.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திராவின் தலைமை செயல் அலுவலரின் சம்பளம் பாதியாகக் குறைந்துள்ளது.
Twitter Vs Meta: கூண்டில் சண்டை செய்யலாம் வாங்க என எலான் மஸ்க் போட்ட பதிவிற்கு, இடத்தை அனுப்புங்கள் என மார்க் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளது தற்போது டிரெண்டாகி வருகிறது.
Warren Buffet Charity Donations உலக பணக்காரர்களில் ஒருவரான பங்கு முதலீட்டு ஜாம்பவான் என அழைக்கப்படும் வாரன் பஃபெட், ஐந்து அறக்கட்டைகளுக்கு 380 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ள செய்தி நிதித் துறையை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து 24,500 கோடி ரூபாய்க்கு, அதிவேகமாக தாக்குதல் நடத்தும் 31 அதிநவீன ட்ரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
Gowthami Subramani June 20, 2023
பொருளாதார நிலையை மேம்படுத்த சேமிப்பும், முதலீடும் சிறந்த காரணிகளாகும். இதில் முதலீடு என்பது பாதுகாப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும், இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்வது நவீனமயமாகியுள்ளது.
இந்தியாவில் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு வரும் (ஜூன்30) 30ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமக்கள் தங்களது பான்கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்கு 2022 மார்ச் 31ம் தேதி வரை காலஅவகாசம் அளித்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து இருந்த காரணத்தால், கடந்த மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக் வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், ஜூன் 30ம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 13 நாட்களில் காலக்கெடு முடிவடையுவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது பான் மற்றும் ஆதார் எண்களை விரைவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இணைக்கத் தவறும் நபர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் என்றும், வரி, ரீ-பன்ட் உள்ளிட்ட சேவைகளை பெற இயலாது என்றும் வருமானவரித்துறை எச்சரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை முதலே பான் - ஆதார் இணைப்பு மேற்கொள்ளும் நபர்களிடம் 1,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அபராதத்துடன் கூடிய இறுதிக்காலக்கெடுவும் வரும் 30ம் தேதியுடன் முடிவடைவதால், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு பான்-ஆதார் இணைப்பை விரைந்து மேற்கொள்ள வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக்கூட்டம் அடுத்த மாதம் 11ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்வதற்காகவும் ஜிஎஸ்டி கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்துவருகிறது. இந்த கவுன்சிலானது குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டப்பட்டு, வரி விதிப்பு முறையில் தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வருவது, பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பு முறையில் உள்ள பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்து வணிகர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதில் ஆலோசிக்கப்படும். அந்த வகையில், ஜூலை மாதம் 11ம் தேதி ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்த 50-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநில நிதியமைச்சா்களும் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கவுன்சில் கூட்டத்தில், சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது, மல்டிபர்ப்பஸ் எனப்படும் பன்நோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறுஆய்வு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.