காஞ்சிபுரத்தில் முதல்நாள் சமைத்து மீதியான உணவை மீண்டும் பதப்படுத்தி மறுநாள் விற்பனை செய்த உணவகத்திற்கு இரண்டாயிரம் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடையை ஒருநாள் அடைத்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர். காஞ்சிபுரம் மாநகரில் கடந்த சில மாதங்களாகவே எண்ணற்ற சாலை ஓரக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுகள் தரமற்ற முறையில் தயாரித்து உணவு பிரியர்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்துள்ளது.
சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 53 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மூட்டைக்கட்டி ஆட்டோவில் எடுத்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சுங்குவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
Priyanka Hochumin July 05, 2023
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் முதல் மாணர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கும் காரணத்தினால், பள்ளிகளை தாமதமாகத் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்றுடன் பள்ளி விடுமுறை முடிந்த நிலையில் இன்று ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். 2023 -2024 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் கூடப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்தனர். அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் பொன்னாடை போர்த்தி மலர் கொடுத்து வரவேற்றார். மேலும் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் பள்ளி ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் தினந்தோறும் பள்ளி சீருடையில் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே சூட்கேஸ் ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம். இங்கு அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் சூட்கேஸ் ஒன்றை பிற்பகலில் வீசி எறிந்து விட்டுச் சென்றார். அந்த சூட்கேஸை மெட்டல் டிடெக்டர் கொண்டு சிஆர்பிஎப் வீரர்கள் சோதனை செய்த போது, அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்ததால், அதிர்ச்சியடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் தெருவில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நவீன சைக்கிளை லுங்கி அணிந்த கொள்ளையன் எந்த பதட்டமும் இல்லாமல் எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜ்கபூர். இவரது மகன் பிரவீன்ராஜ் 12ம் வகுப்பு படித்துவருகிறார். இந்த நிலையில், பிரவீன்ராஜ் பள்ளிக்கு சென்றுவருவதற்காக அவரது தந்தை ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கியர் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.
காஞ்சிபுரம் பிள்ளைச்சத்திரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை உபகரணங்கள் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் சேதமடைந்தன. தமிழகத்தின் மின் தேவை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இவற்றில், காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான காற்றாலைகள் உள்ளன. மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது தமிழகத்தில் மின்வெட்டு இருந்துவருவதால், பல நிறுவனங்கள் காற்றாலை மூலம் மின் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளன. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் 40 சக்கரங்களைக் கொண்ட 70 அடி நீளமுள்ள மூன்று லாரிகளில் காற்றாலைகள் இறக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. சுமார் 120 அடி நீளம் கொண்ட பத்து டன் எடையுள்ள காற்றாலை இறக்கையுடன் கூடிய, 1.8 மெகா வாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி ஜெனரேட்டரை பூந்தமல்லியில் உள்ள நிறுவனத்திடம் வாங்கி என்டிசி குரூப் ஆப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது.அந்த வகையில், பூந்தமல்லியில் ஆர்.ஆர்.பி., எரிசக்தி நிறுவனம் மற்றும் வெஸ்டாஸ் நிறுவனம் வடிவமைத்த காற்றாலைகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று மாலை பிள்ளைச்சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்குகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை ரெக்கைகளுடன் சுமார் 20 அடி பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று லாரிகள் ஏரியில் கவிழ்ந்தன. அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன்மீது லாரி கவிழ்ந்ததால் உபகரணங்களில் அதிக சேதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவரை என் டி சி லார்ஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களும் காற்றாலை உற்பத்தி நிறுவன அதிகாரிகளும் சுற்றிவளைத்து, செய்தியாளரின் செல்போனை பிடுங்கியதோடு, அவர் எடுத்த அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து கொலைமிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி வெங்கடேசன், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் கார்த்திக், தாலுகா காவல் ஆய்வாளர் பேசி பிரேம் ஆனந்த் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேரில்வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டல் விடுத்த ஊழியர்களை செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்க வைத்ததைத் தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் பிள்ளைச்சத்திரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Nandhinipriya Ganeshan February 08, 2023
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி கர்ப்பம் தரித்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது. பிரசவ வலியால் துடித்த ரேவதியை அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர் சரண்ராஜ், செவிலியர் பிருந்தா ஆகியோர் ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது காலை 10.15மணியளவில் ரேவதிக்கு அழகான ஆண் குழந்தை 2.9 கிலோ எடையுடன் சுகபிரசவத்தில் பிறந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டாடா ஏசி வாகனம் நிலைகுலைந்த சமயத்தில், பின்னால் வந்த மற்றொரு சரக்கு லாரியும் மோதியுள்ளது. இரண்டு வாகனங்களுக்கும் சிக்கிய டாடா ஏசி வாகனம் முற்றிலும் சிதைந்த நிலையில், அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.