Gowthami Subramani March 03, 2023
மாசி மகம் சிறப்பு தினத்தில் கும்பகோணம் குளத்தில் நீராடி குளிப்பது வழக்கம். இந்த தினத்தில், குளத்தில் நீராட முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடுவதன் மூலம், மகாமகம் குளத்தில் நீராடி பலனைப் பெறலாம். இந்த சிறப்பான நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கக் கூடியதாகும். இந்த தினத்தில் நீராடுவது மட்டுமல்லாமல், தானங்கள் கொடுப்பதும் விசேஷமான ஒன்றாகும். அந்த நேரத்தில் 20 வகையான தானங்களை வழங்கலாம் எனக் கூறுவர்.
Nandhinipriya Ganeshan March 03, 2023
கும்பகோணம் நகரின் பிராதன கோயிலாக இருப்பது ஆதிகும்பேஸ்வரர் கோயில். சம்பந்தர், அப்பர் போன்ற சைவைக்குரவரகளால் பாடப்பெற்ற சிறப்புடைய சிவாலயமாகும். காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் திருக்குளமாக இருப்பதான் மகாமக குளம். மாசி மகக்குளம் கும்பகோணம் நகரின் மையத்தில் 6.2ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய புனித குலங்களுள் இதுவும் ஒன்றாகும்.
Nandhinipriya Ganeshan March 03, 2023
மாசி மகம் என்றாலே நம்மில் பலருக்கும் மனதிற்கு எட்டுவது கும்பகோணம் மாசி திருவிழா தான். அப்படி அங்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு தெரியுமா? வாங்க தெரிந்துக் கொள்வோம். உலகத்தில் இருக்கும் உயிர்களை உருவாக்கும் விதைகளை அமிர்தம் நிறைந்த குடத்தில் போட்டு வைத்திருந்தார் பிரம்மா. வேடனாக வேஷம் பூண்டு வந்த சிவன், அம்பு கொண்டு அக்குடத்தை சாய்த்து அதிலிருந்து உயிர்களை உருவாக வைத்தாராம். குடமான கும்பத்தை, சிவன் தன் அம்பால் சேதமாக்கி வைத்த இடம் என்பதாலே இது கும்பகோணம் என்று அழைக்கப்பெறுகிறது. பிரம்மன் வைத்திருந்த அந்த குடத்தில் இருந்து விழுந்த ஒரு துளி அமிர்தமே இங்கு குளமாகி பாவம் போக்கி வருவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன.
Nandhinipriya Ganeshan February 16, 2023
இன்றைய காலக்கட்டத்தில் கட்டிடக் கலைக்கு எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால், நமது முன்னோர்கள் எந்தவொரு தொழில்நுட்ப வசதியும் இல்லாமல், நம்மால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கட்டிட கலைகளில் சிறந்து விளங்கியுள்ளார். அதற்கு நம் நாட்டில் உள்ள கோவில் கட்டிட கலைகளே சாட்சி. ஆமாங்க, இந்த உலகத்தில் ஆன்மிகத்திற்கும், கோவில் கட்டிடக் கலைக்கும் இந்தியாவிற்கு நிகரான நாடுகள் எதுவும் இல்லை. அப்படி, உலகமே வியந்து பார்க்கும் ஒருவிஷயம் என்னவென்றால், இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் இருந்து ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் வரை 7 சிவன் கோவில்களுமே ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது தான்.
Gowthami Subramani January 31, 2023
எந்நாளும் இல்லாத சிறப்பு இந்த தைப்பூச திருநாளில் உள்ளது. தை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் பூசம் நட்சத்திரம் வரும் போது, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. இது இந்த நாளின் சிறப்பு நிகழ்வாகும். இது போல எண்ணிலடங்கா சிறப்புகளைக் கொண்ட இந்த தைப்பூச நன்னாளில் சிறப்புத் தலமாக விளங்குவது கொடுமுடிநாதர் கோவிலும் ஒன்றாகும். ஏன், இந்த கோவில் தைப்பூச சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது என்பது பற்றிக் காணலாம். மேலும், இந்த கொடுமுடி நாதர் மகுடேஸ்வரர் கோவில் குறித்த வரலாற்றைப் பற்றி இதில் காண்போம்.
Nandhinipriya Ganeshan January 30, 2023
குருபகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம். இந்த நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்கள் துலாம் ராசியிலும் 4வது பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பீர்கள். எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல், யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு ஆதரவு கொடுப்பீர்கள். இரக்க குணம் என்பது பிறவிலிருந்தே இருக்கும். யாருக்காவும், எந்த காரணத்திற்காகவும், உங்கள் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்ல மாட்டீர்கள்.
Gowthami Subramani January 27, 2023
அழகு என்றால் முருகன் என்று பொருள். ஆறுதலை அளிக்கும் ஆறு தலை கொண்ட முருகன். இன்னும் கோடான கோடி புகழ்களைக் கொண்டிருக்கும் முருகப் பெருமானை வணங்கினோர்க்கு எத்தகைய துன்பங்களும் நிகழாது. அறுபடை என அழைக்கப்படும் முருகப் பெருமானின் ஒவ்வொரு படை வீட்டுக்கும் ஒரு தனி வரலாறே உள்ளது. அப்படியாக மூன்றாவது படை வீடாக அமையும் பழனியைப் பற்றி அறியாதோர் எவருமிலர். பழனி கோவிலுக்கு உள்ள வரலாற்றைப் போலவே, பழனியில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் சிலைக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தப் பதிவில், பழனி முருகன் சிலை பற்றிய ரகசியங்கள் குறித்துக் காணலாம்.
போடி சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி முன்னிட்டு பெருமாளுக்கு அன்ன பாவாடை அலங்கார அபிஷேக ஆராதனை நடைபெற்றது புளி சாதத்தால் நடைபாதை அமைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா நடராஜர் கோலத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ராமநாதபுரம் திரு உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு கலைப்பு நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற திரு உத்தர கோச மங்கை கோவிலில் பச்சை மரகத மேனியாக நடராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோவில் மிகவும் சிறப்பு மிக்க சிவாலயம் ஆகும். மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்கிற சிறப்புகளைக் கொண்டது இந்த கோவில். இலந்தை மரத்து அடியிலே சுயம்புவாய் தோன்றிய கடவுள் இவர். நடராஜ பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாற்றி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு.