Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

திருப்பூர்

வடமாநில தொழிலாளர்களின் அடாவடிக்கு கண்டனம்.. திருப்பூரில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!

Sekar January 28, 2023

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் பலர் தமிழக தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முட்புதரில் கிடைத்த பெண் சடலம்.... பின்னணி என்ன?

Manoj Krishnamoorthi November 29, 2022

திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்ணின் சடலம் முட்புதரில் ரத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.  யார் இந்த பெண்? இந்த குற்றத்தின் பின்னணி என்ன? பாலியல் வன்கொடுமையா..? எனப் பல கோணத்தில் போலீஸார் விசாரணை செய்கின்றனர். 

சேட்டை செய்த சிறுமிக்கு சூடு வைத்து கொலை.. கல்நெஞ்சம் படைத்த தம்பதி கைது!!

Sekar November 05, 2022

திருப்பூர் மாவட்டத்தில் துறுதுறுவென இருந்த சிறுமி சூடு வைத்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருவள்ளுவர் நகரில் மல்லிகா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் சுமை தூக்கும் தொழிலாளியான பிரகாஷ்(26)-கௌரி(24) என்ற இந்த தம்பதியினருக்கு 4 வயதுள்ள ஷிவானி என்ற மகள் இருந்துள்ளார். 

Tirupur Kuttram News : போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தாராபுரம் இளைஞர்...!

Manoj Krishnamoorthi November 03, 2022

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் 17 சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி  பாலியல் தொல்லை அளித்த 22 வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

நீட் தேர்வு மையத்தின் மாடியில் இருந்து 18 வயது மாணவி குத்து தற்கொலை முயற்சி! பகீர் பின்னணி

Priyanka Hochumin November 02, 2022

திருப்பூரில் நீட் தேர்வு மையத்தின் 3 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் ரங்கம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு 18 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். அவர் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். எப்பையும் போல இன்று மையத்திற்கு சென்ற மகளை மாலை அழைத்து வர சென்றுள்ளார் மணிகண்டன். வகுப்பு முடிந்து பாத்ரூம்மிற்கு சென்று வருகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு சென்ற மகம் திடீரென்று கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

தாராபுரம் நகராட்சி அறிவிப்பு....!

Manoj Krishnamoorthi October 29, 2022

தாராபுரம் நகராட்சி வரியினை செலுத்த ஒரு புதிய அறிவிப்பு அளித்துள்ளது, நம் கைப்பேசியில் ஆப்பினை பதிவிறக்கம் செய்து வரியினங்களை செலுத்தலாம். 

Tirupur News : உடுமலைக்கு வரும் நடிகர் சத்யராஜ்..! எப்போனு தெரியுமா..?

Manoj Krishnamoorthi October 27, 2022

வருகின்ற அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் உடுமலை ஜி.வி.ஜி கலையரங்கத்தில் நடக்கும் தமிழிசைச் சங்கத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தான் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறி நடிகர் சத்யராஜ் வருவதை உறுதி செய்துள்ளார். மேலும், இவர் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை புரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திபாவளியால் திருப்பூரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு......!

Manoj Krishnamoorthi October 26, 2022

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி நகர் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான முதலை பண்ணை உள்ளது. சுமார் 100 மேற்பட்ட முதலைகள் இந்த பண்ணையில் பராமரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தால் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு அதிகமாக வருகை தந்து முதலைகளை பார்த்தும் அருகில் இருந்து புகைப்படம் எடுத்தும் கொண்டனர். தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தால் இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைபோல ததும்பியது.  

மோட்டார் ஆஃப் பண்ண போய் தாய், 8 வயது மகன் பலி! திருப்பூரில் சோகம்

Priyanka Hochumin October 17, 2022

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாய் மற்றும் 8 வயது மகன் குட்டையில் மூழ்கி பரிதாபமாக மரணம். சோளம் சாகுபடி செய்யும் சக்திவேல், பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச 12 அடி ஆழமுள்ள செயற்கை பண்ணைக் குட்டையையும் அமைத்துள்ளார். அந்த குட்டை எப்போதுமே தண்ணீர் நிரப்பி இருக்கும். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சோள தட்டைக்கு தண்ணீர் பாய்ச்ச மூவரும் சென்றுள்ளனர். மோட்டாரை ஆஃப் செய்ய போகும் போது மகன் தவறி குட்டையில் விழுந்து தத்தளித்துள்ளார். மகனை காப்பாற்ற சந்திரகலா உள்ளே குதிக்க இருவரும் பலி.

10 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்.. கல்குவாரியில் சடலமாக மீட்பு!!

Sekar October 16, 2022

திருப்பூரில் 10 ஆம் வகுப்பு மாணவி கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார்-சந்தியா தேவி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் காயத்ரி (வயது 16) அவினாசியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு அங்குள்ள ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில்,பெற்றோர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர். மேலும் காயத்ரியை அவரது பெற்றோர் அவினாசி பள்ளியில் இருந்து மாற்றி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சேர்த்துள்ளனர். இதையடுத்து மாணவி காயத்ரி விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.