Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
0.00sensex(0.00%)
நிஃப்டி22,055.70
0.00sensex(0.00%)
USD
81.57

மகப்பேறும் மறுபிறப்பும்

கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள்.. | Body Changes in 1st Month of Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan July 27, 2023

ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தென்படும். அந்தவகையில், கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பார்க்கலாம். முதல் மாதம் என்பது உங்களுடைய கடைசி மாதவிடாய் தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, இந்த அறிகுறிகளும் மாற்றங்களும் தான் நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: ➥ கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உங்கள் உடலின் அளவு மற்றும் வடிவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் கவனிக்கலாம்.  ➥ எப்போதும் இல்லாமல் திடீரென கை மற்றும் கால்கள் வீங்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதேபோல், இடுப்புப் பட்டை இறுக்கமாக இருக்கும். ➥ மார்பகங்களில் அளவுகள் அதிகரித்து காணப்படும். மேலும், முலைக்காம்பைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரியதாகவும் கருமையாகவும் மாறும். ➥ அண்டவிடுப்பிற்கு (அதாவது கருப்பையில் கரு பொருத்தப்படும் போது) பின்பு ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை; உங்கள் பிறப்புறுப்பில் 2 அல்லது 3 சொட்டு இரத்தப்போக்கு (spotting) ஏற்படும். இது கர்ப்பக்காலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் பொதுவான ஒன்று தான். ➥ யோனி சுரப்பு எப்போதும் இல்லாமல், இந்த மாதிரியான தருணத்தில் அதிகரித்து காணப்படும். சிலருக்கு அவற்றின் நிறம் மற்றும் தன்மையில் மாற்றம் இருக்கும். ➥ கருப்பையில் கரு உள்வைப்பு நடைபெறுவதால், அதீத சோர்வாக உணர்வீர்கள். அடிக்கடி தலைச்சுற்றுவது போன்று உணர்வு ஏற்படும். ➥ ஹார்மோன் மாற்றங்களால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படும். இதனால், சில சமயங்களில் ஈறுகளில் இரத்த கசிவும் ஏற்படும்.  மேலே குறிப்பிட்ட சில அறிகுறிகள் மற்றும் உடல் மாற்றங்களை நீங்கள் அனுபவித்தீர்கள் என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. | Foods to Avoid in First Month of Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan July 19, 2023

கருவுற்ற முதல் இரண்டு மாதங்கள் வரை உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று. காரணம் மூன்று மாதம் வரையிலும் கரு பலவீனமானதாக தான் இருக்கும். அப்போது சில உணவுகளை அந்த பெண் எடுத்துக்கொள்ளும் அது கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம். அந்தவகையில், முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பது பற்றி இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறையாக ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் கடைபிடிக்க வேண்டும். கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்: ➥ கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சீஸ் உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம், இந்த சீஸ் பதப்படுத்தப்படாத பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால், ஃபுட் பாய்ஷன் ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கும். அதை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, ஆரம்பகால கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பது நல்லது. ➥ மைக்ரோவேவ்-ரெடி உணவுகள், கேக்குகள், பிஸ்கட்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள் போன்ற ஜீரோ கலோரி உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். மேலும், சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில் தீங்கு விளைக்கக்கூடிய பாக்டீரியாக்களும் இருக்கலாம். ➥ கடல் உணவுகளில் அதிகளவு பாதரசம் இருக்கும். இது கருவின் மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடும். எனவே, வால்மீன், டுனா ஆகியவற்றை ஆரம்ப காலத்தில் மட்டுமல்லாமல், கர்ப்ப காலம் முழுவதுமே தவிர்ப்பது நல்லது. ➥ பொதுவாக, பழங்கள் ஆரோக்கியமானது தான். இருப்பினும், சில பழங்களை கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாது. அவற்றில் ஒன்று தான் பப்பாளி. பழுக்காத மற்றும் அரை பழுத்த பப்பாளி பழங்களில் லேடெக்ஸ் இருக்கிறது. இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால், குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். எனவே கர்ப்ப காலத்தில் இவற்றை தவிர்க்கவும். இருப்பினும், பழுத்த பப்பாளியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ➥ அதேபோல், அன்னாசிப்பழத்தையும் இந்த மாதிரியான நேரத்தில் சாப்பிடக்கூடாது. காரணம் அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் உள்ளது, இது கருப்பை வாயை மென்மையாக்கி, கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது . ➥ சில பெண்களுக்கு ஆஃப் பாயில் சாப்பிடுவது, பச்சை முட்டையை குடிப்பது மிகவும் பிடிக்கும். இருப்பினும், கர்ப்பக் காலத்தில் அப்படி உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பச்சை முட்டையில் இருக்கும் ஒருவிதமான நுண்ணுயிரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கக்கூடியது. ➥ அதிகளவு காஃபின் உட்கொள்வதையும், ஆல்கஹால் எடுத்துக் கொள்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோல், அதிகப்படியான இனிப்புகள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது எடை அதிகரிப்பு மற்றும் கர்ப்பக்கால நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

உமிழ்நீரை வைத்தே கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.. பயன்படுத்துவது எப்படி? | How to Use Saliva Pregnancy Test

Nandhinipriya Ganeshan June 21, 2023

திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான தருணம் கரு உறுதியாகும் தருணம். கருவுற்ற ஆரம்ப நாட்களில் தாங்கள் கருவுற்றிருக்கிறோமா என்பதை வீட்டிலேயே அறிந்து கொள்ளும் வகையில் பல பெண்களும் பயன்படுத்தும் உபகரணம் தான் கர்ப்ப பரிசோதனை கிட். ஆனால், இதுவரை பெண்களின் சிறுநீரை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகிலேயே முதன்முறையாக உமிழ்நீரை கொண்டு அறியக்கூடிய புதிய தயாரிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'சாலிஸ்டிக்' (Salistick) என்று அறியப்படும் இந்தச் சோதனைக் கருவியானது, கொரோனா சோதனை கருவிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எங்கும், எந்த நேரத்திலும் சோதிக்கும் திறனை வழங்கும் இந்த தனித்துவமான தயாரிப்பை ஜெருசலேமைச் சேர்ந்த 'சாலிக்னோஸ்டிக்ஸ்' என்ற ஸ்டார்ட்-அப் உருவாக்கியுள்ளது. எப்படி பயன்படுத்துவது? இந்த கிட்டில் இருக்கும் குச்சியின் நுனியை, தெர்மாமீட்டரை வாயில் வைப்பது போன்று வைத்துக் கொள்ள வேண்டும். இது உமிழ்நீரை சேகரிக்கும். அந்த உமிழ்நீரை பிளாஸ்டிக் டியூபில் மாற்ற வேண்டும். அப்போது, வேதியியல் நிகழ்வுகள் நடைபெற்று, கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் (எச்.சி.ஜி) இருக்கிறதா என்பதை கண்டறியும். இவ்வாறு பரிசோதனை செய்வதன் மூலம் 5 முதல் 15 நிமிடங்களுக்குள் கர்ப்ப பரிசோதனை குறித்த முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். ஆரம்ப அறிகுறிகள், முதல் மூன்று நிமிடங்களுக்கு முன்பே தோன்றிவிடும். தற்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இந்தத் தயாரிப்பு விற்பனைக்கு வந்துள்ளது.

குறை பிரசவம் ஏற்பட இது தான் காரணம்..! கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.! | Premature Baby Reasons In Tamil

Gowthami Subramani June 19, 2023

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. இது குழந்தைகள் இறப்பதற்குக் காரணமாகவும் அமையும். குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தை எடை குறைவாகப் பிறக்கும். இந்த குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் பிரிமெச்சூர் என்று கூறுவர்.

கருச்சிதைவுக்கு பிறகு எப்போது தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்..? | Sex After Miscarriage

Nandhinipriya Ganeshan June 16, 2023

கருச்சிதைவு என்பது ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு. நானும் தாயாகப் போகிறேன் என்று பல கனவுகளுடன் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, எதிர்பாராத விதமாக அது நடக்காமல் போனால் அந்த பெண்ணிற்கு மனதில் ஏற்படும் வலிகளுக்கு அளவே இருக்காது. இதனால், கருச்சிதைவுக்கு பிறகு அவர்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் முழுமையாக குணமடைய சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். வழக்கமான வாழ்க்கைக்கு திரும்புவது சற்று சவாலான காரியமாக இருக்கும். மேலும், இந்த மாதிரியான சமயத்தில் அனைத்து தம்பதிகளுக்கும் மனதில் வரும் சந்தேகம், கருச்சிதைவுக்கு பிறகு தாம்பத்திய உறவு எப்போது வைத்துக் கொள்ளலாம்? அப்படியே வைத்துக்கொண்டாலும் அது பாதுகாப்பானதாக இருக்குமா? என்பதாக தான் இருக்கும். கருச்சிதைவுக்கு பிறகு தாம்பத்திய உறவு: கருச்சிதைவுக்கு பிறகு தாம்பத்திய உறவை மீண்டும் தொடங்குவதற்கான காத்திருப்பு காலம் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான சிகிச்சைகளுக்கு தேவைப்படும் நேரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு தம்பதிக்கும் மாறுபடும். அதன்படி, தம்பதி உணர்ச்சிப்பூர்வமாக தயாரானதும், பெண்ணின் உடல் முழுமையாகக் குணமடைந்த பிறகும் உறவை தொடரலாம். பொதுவாக, முதல் மூன்று மாதங்களில் (First Trimester) கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்ணின் பிறப்புறப்பில் வலி, இரத்தப்போக்கு இருக்கும். ஒருவேளை வலி, இரத்தப்போக்கு எதுவும் இல்லை என்றால், இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகு உறவில் ஈடுபடலாம். இருப்பினும், இரண்டாவது (Second Trimester) அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் (Third Trimester) கருச்சிதை ஏற்பட்டால், பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க குறைந்தது ஆறு வாரங்கள் காத்திருப்பது நல்லது. அடுத்த குழந்தைக்கு எப்போது முயற்சி செய்யலாம்? பெரும்பாலான மருத்துவர்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு மீண்டும் அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்யும்போது முதல் மாதவிடாய் வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். முதல் மாதவிடாய் என்பது கருச்சிதைவுக்கு நான்கிலிருந்து ஐந்து வாரங்கள் வரை ஆகும். ஏனென்றால், கருக்கலைந்த பிறகு ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இந்த கால அவகாசம் தேவைப்படுகிறது. கருச்சிதைவுக்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்க முயற்சி செய்ய நீங்கள் குறைந்தது ஒரு மாதமாவது காத்திருக்க வேண்டும். இருப்பினும், சில பெண்களுக்கு கருச்சிதைவுக்கு பிறகு சில வாரங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படலாம். வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரத்தப்போக்கு முற்றிலும் நிற்கும் வரை உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. இதனால், பாலியல் தொடர்பான தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும், சில பெண்களுக்கு கர்ப்பையில் உள்ள எஞ்சிய திசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை வரலாம். இந்த செயல்முறையில் உடல் முழுவதுமாக குணமடைய குறைந்தது மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் எடுத்துக்கொள்ளும். இது அவர்களின் உடலை பொருத்தது. மேலும், கருச்சிதைவுக்குப் பிறகு கருப்பை வாய் மற்றும் கருப்பை ஓரளவு விரிவடைந்து காணப்படும். இதனால், கருப்பையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவற்றை தவிர்க்கவும், பிறப்புறுப்பு முழுமையாக குணமடையும் வரையிலும் டம்போன்களைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கரு கலையப் போவதை உணர்த்தும் அறிகுறிகள்.. | Abortion Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan June 09, 2023

கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் மிகுந்த பயத்தையும் வருத்ததையும் ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று கருச்சிதைவு. ஏராளமான கனவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கையில் புதிய அத்தியாமாய் தாய்மையை அனுபவிக்க தயாராகும் பெண்களுக்கு இந்த வார்த்தையை கேட்கும்போதே ஒரு மாதிரியான வருத்தம் ஏற்படும். கருச்சிதைவு என்பது கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்கள் அல்லது மாதங்களில் திடீரென நிகழும் பொதுவான மற்றும் மோசமான ஒரு நிகழ்வு. ஏனென்றால், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதம் வரை கருவானது நிலையானதாக இருக்காது; சில சமயங்களில் தானகவே கலையும் வாய்ப்பும் அதிகம். இதனால் தான், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மூன்று அல்லது ஐந்து மாதங்கள் கழித்து உறவினர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். இப்படி கரு தானாகவே கலைந்து போவதற்கு என்ன காரணம்? அதற்கான அறிகுறிகள் என்ன? என்பதை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். கரு சிதைவுக்கான காரணம்: கருச்சிதைவு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இதன் காரணம் அறியமுடியாததாக உள்ளது. இருப்பினும், கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவிற்கான பொதுவான காரணம், குரோமோசோம் பிறட்சிகள், அதாவது குழந்தையின் குரோமோசோமில் எதாவது தவறு நிகழ்வது. இந்த அசாதாரண மாற்றங்கள் பரம்பரை ரீதியாகவோ அல்லது தன்னிச்சையாகவோ ஏற்படலாம். இது எல்லோருக்கும் உண்டாகாது என்றாலும், குடும்ப வழியில் உள்ள பெண்களுக்கு அதிகம் உண்டாகிறது. சில சமயங்களில், கருப்பை அல்லது கருப்பை வாயில் ஏற்படும் தொற்றுகளும் கருச்சிதைவை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நிலைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் கருச்சிதைவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதவிர, தைராய்டு நோய்கள், கருப்பை கோளாறுகள், இதய நோய் மற்றும் கடுமையான சிறுநீரக நோய்கள் ஆகியவையும் கருச்சிதைவை ஏற்படுத்தும். திடீரென ஏற்படக்கூடிய சில அதிர்ச்சியும் கருச்சிதைவை ஏற்படுத்தலாம். 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம். ஏனென்றால், வயது அதிகமாக குரோமோசோம்களில் அதிகளவில் மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவு கருச்சிதைவை ஏற்படுத்துகிறது. பொதுவாக, அதிகமாக புகைப்பிடிக்கும், குடிப்பழக்கம் உள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம். சில சமயங்களில் அதிக எடை மற்றும் குறைவான எடையும் கருச்சிதைவை ஏற்படுத்தலாம். இதுதவிர, மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது அதில் இருந்து வரும் மின்காந்த அலைகள் அதிகளவு ஆக்ஸினேற்ற அழுத்தத்திற்கு வழி வகுக்கிறது. இது கர்ப்பிணி பெண்களின் திசு மற்றும் செல் சேதத்திற்கு ஆளாக்குகிறது. இதனாலும் கருச்சிதை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கருச்சிதைவுக்கான அறிகுறிகள்: கரு கலையப்போகிறது என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். எனவே, அந்த மாதிரியான சமயங்களில் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. கருச்சிதைவுக்கான அறிகுறிகளாவன: மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் இரத்தப் போக்கு முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான பிடிப்புகள் இரத்தக் கட்டிகளுடன் கடுமையான இரத்தப் போக்கு எதிர்பாராத எடை இழைப்பு பிறப்புறுப்பின் வழியாக திசுக்கள் உறைந்து வெளியாவது பிறப்புறுப்பில் வெள்ளை - பிங்க் நிறத்தில் திரவம் வெளியேற்றம் மார்பக மென்மை, குமட்டல், வாந்தி போன்ற கர்ப்ப கால அறிகுறிகள் இல்லாமல் போதல்

கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் செய்யக் கூடாதவை.. | Things to Avoid During Early Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan June 08, 2023

நீங்க குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், மாதவிடாய் சுழற்சி முடிந்ததும் சரியான தருணத்தில் பாலுறவில் ஈடுபட வேண்டும். குறைந்தது வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று முறையாவது பாலுறவில் ஈடுபட வேண்டியது அவசியம். இதைவிட முக்கியமானது குறிப்பிட்ட சில செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டியதும் அவசியம். ஏனென்றால், இது கருக்கலைப்புக்கு வழிவகுக்கலாம். எனவே, கர்ப்பத்தின் முதல் மாதத்தில் அதாவது ஆரம்பகால கர்ப்ப காலத்தில் செய்யக் கூடாத சில விஷயங்கள் என்னென்ன என்பதை கீழே குறிப்பிட்டுள்ளோம். கர்ப்பத்தின் முதல் மாதத்தில் செய்யக் கூடாதவை: பொதுவாக நிறைய பெண்கள் இறுக்கமான ஆடைகள் அணிவதை விரும்புவார்கள். ஆனால், கருவுறுதலை திட்டமிட்ட பிறகு இறுக்கமான குறிப்பாக உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். மேலும், லெகின்ஸ், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான மேல் ஆடைகளையும் அணிய வேண்டாம். ஏனென்றால், கரு உருவாகும் போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், இயற்கையாக சுவாசிக்க உடலுக்கு இடம் கொடுக்க வேண்டியதும் அவசியம். எனவே, முடிந்தவரை இறுக்கமான ஆடைகளை கொஞ்சம் நாள் ஒதுக்கி வைத்துவிட்டு, தளர்வான ஆடைகளை அணியுங்கள். அதேபோல், ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட்டு, தட்டையான மற்றும் வசதியான காலணிகளை அணியுங்கள். முதல் மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, முதல் மூன்று மாதங்களில் நீண்ட தூரம் பயணம் செய்வது காலை சுகவீனத்தை ஏற்படுத்துவதோடு, உங்கள் கர்ப்பத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, முடிந்த வரை நீண்ட தூரம் நடப்பது, வேகமாக நடப்பது, வாகனத்தில் செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். முதல் மூன்று மாதம் வரை 20 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள எந்தப் பொருளையும் தூக்க வேண்டாம். அதேப்போல், எந்த வீட்டு வேலைகளைச் செய்யும்போதும் குனிய வேண்டாம், அது உங்களுக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தும். மண் சம்பந்தமான பணிகளில் ஈடும்படும் போது தவறாமல் கையுறைகளை பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். அதேபோல், நம்மில் பலரும் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இருப்பினும், அவற்றின் முடி, மலம் ஆகியவற்றில் ஒட்டுண்ணிகள் இருக்கும். எனவே, கர்ப்பக் காலத்தில் செல்ல பிராணிகளை பராமரிப்பதை கொஞ்சம் தவிர்க்கவும். கர்ப்பம் உறுதியானதும் முதல் மூன்று மாதங்கள் வரை பாலுறவில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், அந்த சமயத்தில் உடலில் ஏற்படும் அழுத்தம் கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம். பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாத அறிகுறிகள்.. | First Month of Pregnancy Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan June 07, 2023

ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தோன்றும். அந்தவகையில், கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். முதல் மாதம் என்பது உங்களுடைய கடைசி மாதவிடாய் தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, இந்த அறிகுறிகள் தான் நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும். முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள்: ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்பதை முதலில் உணர்த்தும் அறிகுறி என்றால் அது மாதவிடாய் தள்ளிப்போவது தான். இது தான் முதல் அறிகுறி. அதாவது, கருத்தரித்த பிறகு உடல் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்கிவிடும். இதனால், மாதவிடாய் நின்றுவிடும். கருவுற்ற முட்டை கருப்பையில் பதியும்போது, ​​உள்வைப்பு காரணமாக லேசான இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்பை கவனிக்கலாம். கருத்தரித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இது நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த லேசான இரத்தப்போக்கு வலியற்றதாகவும் இருக்கும். இருப்பினும், பிறப்புறுப்புகளைத் துடைக்கும்போது மட்டும் வலி இருக்கும். இதுவும் இயல்பான ஒன்றே. அடுத்த அறிகுறி உங்க மார்பகங்களில் தென்படும். அதாவது, கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உங்கள் மார்பகங்களில் சிறிய புடைப்புகள் மற்றும் வலி இருக்கலாம். மேலும் முலைக்காம்பு கருமையாக இருக்கும். அதேபோல், மார்பக நரம்புகள் வெளியில் தெரியும் அளவிற்கு இருக்கும். கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் மனநிலையில் பல மாற்றங்களை அனுபவிக்கலாம். உதாரணமாக, சிறிய சண்டையாக இருந்தாலும் அழ ஆரம்பிக்கலாம் அல்லது கவலைப்படலாம். காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் கோபப்படலாம். இதற்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாறுவதுதான். உடலில் பீட்டா எச்.சி.ஜி அளவுகள் அதிகரிப்பதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இது கர்ப்பத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பே ஏற்படுகிறது. வாந்தி, குமட்டல் போன்றவை பகல் அல்லது இரவு என எந்த நேரத்திலும் நிகழலாம். இருப்பினும், சில கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது. அதீத சோர்வாக உணர்வீர்கள், படுத்தாலும் தூக்கம் வராது. இதற்கு காரணம் கருப்பையில் கருவின் வளர்ச்சிக்காக உங்க உடல் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள தொடங்கும். இதனால் ஆற்றல் அனைத்தும் அதற்கே செலவாகும். அந்த சமயத்தில் உடல் ஒரு நிலையில் இருக்காது. உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் கருப்பைக்கு இரத்த ஓட்டத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், சிறுநீரகங்கள் உடல் திரவங்களைக் கையாள அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதன் விளைவு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை தூண்டும். கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் அமைப்பில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், கரு வளரத் தொடங்குவதால் உங்க வயிறு மற்றும் குடலை மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால், மூன்றாவது மூன்று மாதங்களில் இந்த அறிகுறிகளை மீண்டும் அனுபவிப்பீர்கள். புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தசைகளை தளர்த்துவதால், உணவு மெதுவாக குடல் வழியாக செல்கிறது. இதனால் செரிமானம் மெதுவாக நடைபெறும், இதன் விளைவு மலச்சிக்கல். ஒரு சில பெண்களுக்கு ஆரம்பகால கர்ப்ப காலத்தில் அடிக்கடி தலைவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan May 23, 2023

கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால், இந்த நேரத்தில் உடல் நிறைய ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதனால், உடலில் எடை அதிகரிப்பது, மார்பக பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுவது, முடி மற்றும் தோல் பளபளப்பாக மாறுவது போன்றவை நிகழ்கின்றன. இருப்பினும், இவற்றை தாண்டி இன்னும் பல மாற்றங்கள் உள்ளன. அதாவது, உங்கள் யோனி (பிறப்புறுப்பு) பகுதியிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த யோனி மாற்றங்கள் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் அவ்வளவாக தெரியாது. ஆனால், கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் கவனிக்கலாம். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் யோனியின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் பொதுவான ஒரு விஷயம். சரி வாங்க கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில யோனி மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். யோனி வீங்குதல்: கர்ப்ப காலத்தில் யோனி பகுதியில் வீங்கி வலிக்கிற நரம்புகள் வெளியில் தெரியும். சுமார் 10 சதவீத பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு காரணம் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகமாக இருப்பது தான். எனவே, கர்ப்பிணிப் பெண் நீண்ட நேரம் உட்காருவதையோ நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், அதிகளவு தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க வேண்டும். pH அளவில் மாற்றம்: கர்ப்ப காலத்தில் உடலின் பாகங்களுக்கு அதிகளவு இரத்த ஓட்டம் இருக்கும். இதில் கருப்பை மற்றும் பிறப்புறுப்பும் அடங்கும். அதிகளவு இரத்த ஓட்டம் கருப்பை மற்றும் யோனி பகுதியில் உள்ள இரசாயனங்களின் pH சமநிலையை மாற்றுகிறது. இதனால், கர்ப்பிணியின் யோனியில் ஒருவிதமான மாவு வாசனை ஏற்படும். இருப்பினும், அதற்கு மாறாக துர்நாற்றம் வீசினால், அது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும். மேலும், பிறப்புறுப்பு பகுதியில் உள்ள இரசாயனங்களின் pH சமநிலையில் மாற்றம் ஏற்படும் போது, யோனியில் சுவை மாற்றமும் ஏற்படுகிறது. அதாவது, யோனி பகுதியில் உலோகம் மற்றும் உப்பு கரிப்பது போன்ற சுவை இருக்கும். நிறமாற்றம்: பொதுவாக, யோனியின் நிறம் இளஞ்சிவப்பாக இருக்கும். ஆனால், ஹார்மோன் மாற்றங்களுடன் இரத்த ஓட்டமும் அதிகரிப்பதால் யோனியின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகிறது. பிரசவத்தை எதிர்கொள்ளும் தாயிக்கு நிறமி (பிக்மென்டேஷன்) என்பது பொதுவானது தான். இது லேபியா மற்றும் வுல்வாவை பாதிக்கிறது. அந்த சமயத்தில் யோனியின் நிறம் ஊதா அல்லது நீல நிறமாக மாறுகிறது. இருப்பினும், இந்த நிற மாற்றங்கள் பிரசவத்திற்கு நான்கு வாரங்களுக்கு முன்பே ஏற்படத் தொடங்குகின்றன. வெள்ளைப்படுதல்: பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் மட்டுமே வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. கர்ப்பக் காலத்தில் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால், லேபியாவில் (Labia) மாற்றங்களை ஏற்படுத்தும். இது லுகோரியா எனப்படும் பால் போன்ற திரவத்தை உருவாக்க யோனி சுவர்கள் தூண்டப்படும். இது தான் யோனி பகுதியில் எந்த தொற்றுநோய்களும் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. எனவே, வெள்ளைப்படுதல் வழக்கத்தை விட அதிகமாக இருந்தால் பயப்பட வேண்டாம். அதிகமான முடி வளர்ச்சி: அதிகப்படியாக வெள்ளைப்படுதல், pH அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற மாற்றங்கள் உங்களுடைய யோனி பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அரிப்பும் ஏற்படும். அரிப்பு என்பது கர்ப்பத்தின் பொதுவான அறிகுறியே. ஆனால் இந்த அரிப்பு தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவரை அணுகவும். மேலும், இரத்த ஓட்டத்தில் ஈஸ்ட்ரோஜனின் அதிக அளவு அந்தரங்க முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கூடியவை. இதனால் தான், மாதம் ஒருமுறை மருத்துவரை அணுகும்போது முடியை நீக்கி விடுகிறார். பெண்ணின் பிறப்புறுப்பு: ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு கர்ப்ப காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில், யோனி பகுதியில் ஏற்படும் சில மாற்றங்கள் விசித்திரமாகக்கூட தோன்றலாம். ஆனால் அவை முற்றிலும் இயல்பானவையே. இந்த மாற்றங்கள் எதுவும் நீண்ட காலம் நீடிக்காது, அத்தோடு அவை உங்க கர்ப்பத்தை எந்த வகையிலும் பாதிக்காது. மேலும், உங்க பிரசவம் முடிந்த பிறகு (குழந்தை பிறந்த பிறகு) உடல் பாகங்கள் அனைத்தும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவிடும். இருப்பினும், இந்த மாற்றங்கள் உங்க அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டால், அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகள்.. | Early Pregnancy Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan March 27, 2023

ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தோன்றும் என்றாலும் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை கவனிக்க தவறிவிடுகிறார்கள். இதற்கு காரணம் உடல் இன்னொரு உயிரை சுமக்க தயாராகிவிட்டால் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியாததே. சரி, வாங்க நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.