Vaishnavi Subramani March 20, 2023
பொதுவாகக் குழந்தைகளைத் தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Vaishnavi Subramani March 14, 2023
இந்த காலகட்டத்தில் பல தாய்மார்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள் ஆனாலும் அவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி நினைத்துக் கவலைப்படுவார்கள் அதற்கு இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். இந்த தாய்ப்பாலைச் சேகரிக்கும் முறையில் எவ்வளவு நாட்கள் வைத்துப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்வது அவசியம். இந்த முறை மூலம் வீட்டில் நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் குழந்தை உங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
Gowthami Subramani February 27, 2023
வளர்ந்த குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல, புதிதாக பிறந்த குழந்தைகளைக் கையாளக் கூடாது. எனவே, பிறந்த குழந்தைகளைக் குளிப்பாடும் போது மிகக் கவனமாகக் கையாள்வது அவசியம். நாம் பயன்படுத்தும் சாதாரண சோப்புகள், ஷாம்புகளைப் பயன்படுத்தக் கூடாது. பிறந்த குழந்தைகளுக்கென பிரத்யேகமான சோப்பு உள்ளது. இதில் பிறந்த குழந்தையை எப்படி குளிப்பாட்டலாம் என்பதைப் பற்றி இதில் காணலாம்.
Nandhinipriya Ganeshan February 08, 2023
பொதுவாக, குழந்தைகள் பிறக்கும்போது 3 கிலோ அல்லது அதற்கு குறைவாக தான் இருக்கும். ஒருசிலருக்கு மட்டுமே 4 கிலோவிற்கு மேல் பிறக்கும், இதுவே அதிக எடையில் இருப்பதாக தான் கூறுவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த க்ளெடியோன் சாண்டோஸ் என்ற கர்ப்பிணி தாய்க்கு (42 வயது), 7.3 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மிகவும் எடை அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடந்தது. இது மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தாயும், சேயும் என நலம் என கூறப்படுகிறது. மேலும், இக்குழந்தைக்கு ‘ஆங்கர்சன் சாண்டோஸ்ய என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தையின் தாய், கடுமையான நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக இவருக்குப் பிறந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. மேலும், பிறக்கும் குழந்தை 4 கிலோவுக்கு மேல் எடை இருந்தால், மேக்ரோசோமியாவால் பாதிக்கப்படுவதுண்டு. இதற்கு காரணம் தாயின் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகரிப்பால், சிசுவுக்குச் செல்லும் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இதனால் குழந்தை அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் மேக்ரோசோமியாவால் பாதிக்கப்படும். தாயின் நீரிழிவு நோயே குழந்தையின் இப்பிரச்னைக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர். இதேப்போல், கடந்த 1955 ஆம் ஆண்டு ஒரு பெண்ணிற்கு 10.2 கிலோ எடையில் குழந்தை பிறந்ததே அதிக எடையாகப் பார்க்கப்படுகிறது.
Gowthami Subramani February 08, 2023
பிறக்கும் குழந்தைகள், இந்த எடையுடன் தான் பிறக்க வேண்டும், இந்த அளவு உயரத்தில் தான் இருக்க வேண்டும் என உண்டு. ஆனால், குழந்தைக்கு எடை மற்றும் உயரம் அதிகமாக இருந்தாலும், குறிப்பிடப்பட்ட அளவை விட குறைவாக இருந்தாலும், அது ஆபத்தையே விளைவிக்கும். இது குறித்த முழு விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.
Nandhinipriya Ganeshan February 03, 2023
பொதுவாக இரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பெயர்களை வைக்கத் தான் ஆசைப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப ஒரே மாதியான முதல் எழுத்து பெயர்களை தான் தேடுவார்கள். இதோ உங்க வீட்டு இளவரசிகளுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள். அதுவும் இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப.
Gowthami Subramani January 18, 2023
குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்திப்பது பொதுவான ஒன்று. இன்னும் சிலர், குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்பதில் குழம்பி இருப்பர். இதில், சில பெற்றோர்கள் குழந்தைக்குப் பெயர் வைக்க ஜாதக ரீதியாக இருக்க வேண்டும் என நினைப்பர். இன்னும் சில பேர், தங்களின் தாத்தா, பாட்டி என முன்னோர்களின் பெயர்களையும், தமிழ் பெயர், குலதெய்வங்களின் பெயர் என பெயர் வைப்பர்.
Gowthami Subramani January 13, 2023
சிறிய குழந்தைகள் என்று கூறப்பட்டாலும், அவர்களுக்கு இயற்கையாகவே, நுண்ணறிவுத் திறன் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த காலகட்டத்தில் அவர்களின் சில நடவடிக்கைகளிலிருந்தே நுண்ணறிவுத் திறன் மேலும் வளர்வதும், அவற்றிலிருந்து, குறைவதும் அமையும். அந்த வகையில், குழந்தைகளின் புத்திசாலித் தனத்தை வளர்க்கவும், அவர்கள் தவறான தகவல்களைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கவும் செய்ய வேண்டிய சில குறிப்புகளை இதில் காண்போம்.
Vaishnavi Subramani December 27, 2022
பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால் கொடுப்பது என்பது வழக்கம். ஆறுமாதம் ஆனால் திட மற்றும் திரவ உணவுகள் கொடுப்பது பழக்க வேண்டும்.கடைகளில் விற்கப்படும் உணவுகள் கொடுப்பதால் சத்து இருப்பதாகக் கூறினால் கூட, வீட்டில் செய்யும் உணவு போல் எந்த உணவுகளாலும் சத்துதர இயலாது.
Vaishnavi Subramani December 20, 2022
வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான குளியல் எண்ணெய் மற்றும் குளியல் பொடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் சருமம் மற்றும் கேசத்தை பராமரித்து பாதுக்கவும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.