Sat ,Jun 03, 2023

சென்செக்ஸ் 62,846.38
344.69sensex(0.55%)
நிஃப்டி18,598.65
99.30sensex(0.54%)
USD
81.57

திருநெல்வேலி

கிணறு தோண்டும்போது ஏற்பட்ட பயங்கர விபத்து.. 3 பேர் பலி..

Nandhinipriya Ganeshan February 16, 2023

தென்காசி ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் பால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. அங்கு, ஒரு கிணறு வெட்ட முடிவு செய்து, அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரை அணுகியுள்ளார். அவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கிணறு வெட்டும் பணியை ஒப்படைத்தார். இதனையடுத்து கிணறு வெட்டும் பணி 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று பாறைகளை தகர்ப்பதற்காக டெட்டனேட்டர்களை பயன்படுத்தி வெடி வைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில், பணியில் இருந்த 4 பேரில் அரவிந்த் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆசிர் சாம்சன் (22) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ராஜலிங்கம் என்பவரும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணறு வெட்டும்போதும் வெடி வெடித்து 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பெண்களே உஷார்.. போலீசார் அறிவுறுத்தல்!!

Sekar January 26, 2023

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள பெண்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து, மிரட்டிய இளைஞர்களை திருநெல்வேலி போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லையில் ஏகாதசி வழிபாடு கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! 

Kanimozhi December 05, 2022

108 திவ்ய தேசங்களில் ஒன்றானது திருக்குறுங்குடி அருள்மிகு ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோவில். இத் திருக்கோவிலில்பெருமாள் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி என மூன்று ரூபங்களில்  மூலவராக அருள் பாலிக்கின்றாா்.  தன் பக்தன் நம்பாடுவானுக்காக கொடிமரத்தை விலக்கி காட்சி கொடுத்த இடம். கைசிக புராணம் நடைபெற்ற இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

பகீர்.. ஒரே மகளை துப்பட்டாவால் கழுத்தை நெறுத்து கொன்ற கொடூர தாய்.. கண்ணை மறைத்த ஜாதி வெறி.. 

Nandhinipriya Ganeshan November 24, 2022

பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே பாலாமடையைச் சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆறுமுகக்கனி (வயது 42) . இந்த தம்பதிக்கு 19 வயதான அருணா என்ற மகள் இருந்தார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் காலேஜில் டிப்ளமோ நர்சி படித்து வந்தார். இந்தநிலையில், அருணா தனது கல்லூரியில் படிக்கும் இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் வேறு சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்து, பெற்றோ எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அருணா அவரை தான் கல்யாணம் செய்துக்கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.  இதனால், ஆறுமுகக்கனி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அருணா படிக்கும் கல்லூரிக்கு சென்று, தனது மகளின் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

திருநெல்வேலிக்கு டிக்கெட் கிடைக்கலியா? தமிழக அரசின் தீபாவளி சிறப்பு ஏற்பாடு இருக்க கவலை ஏன்?

UDHAYA KUMAR October 20, 2022

சென்னையிலிருந்து திருநெல்வேலி பயணிக்கும் பேருந்துகள் காலை நேரத்தில் எத்தனை பேருந்துகள் 1. முதல் பேருந்து காலை 10.30 மணிக்கு முதல் பேருந்து புறப்படுகிறது. 13 மணி நேரம் 45 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் இடையில் மதியம் மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும் நள்ளிரவு 11 மணி 15 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது.

டிக்கெட் கிடைக்கலியா? தீபாவளிக்கு நாகர்கோவில் போக தமிழக அரசின் சிறப்பு திட்டம் இத பயன்படுத்திக்கோங்க... !

UDHAYA KUMAR October 20, 2022

சென்னையிலிருந்து நாகர்கோவில் பயணிக்கும் பேருந்துகள் காலை நேரத்தில் எத்தனை பேருந்துகள் 1. முதல் பேருந்து காலை 10.30 மணிக்கு முதல் பேருந்து புறப்படுகிறது. 13 மணி நேரம் 45 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் இடையில் மதியம் மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும் அதிகாலை 12 மணி 15 நிமிடங்களுக்கு நாகர்கோவிலை வந்தடைகிறது. அனைத்து பேருந்துகள் பற்றியும் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்

திருநெல்வேலியில் கரண்ட் கட்!

UDHAYA KUMAR October 03, 2022

TANGEDCO திருநெல்வேலி மாவட்டம் மின்பராமரிப்பு பணிகள் அக்டோபர் 2022 இன்று மற்றும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு.  1/10/2022 to 30/10/2022 அக்டோபர் 2022 மாதத்துக்கான மின் தடை நிலவர அட்டவணை திருநெல்வேலியில் எங்கெல்லாம் மின்தடை ஏற்படும். எப்போது மின்சாரம் திரும்ப வரும் உள்ளிட்ட தகவல்களை இங்கு காண்போம். திருநெல்வேலியில் இருக்கும் முக்கியமான பகுதிகளின் பட்டியல். 

நிச்சியத்திற்கு பின்னர் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டதால் நெல்லையில் நடந்த கொடூரம்!

Priyanka Hochumin September 09, 2022

நெல்லை மாவட்டத்தில் கல்யாணத்திற்கு முந்தின நாள் தன்னுடைய காதலனுடன் மாயமான இளம்பெண். திருமணம் செய்து கொண்ட பிறகு மனஸ்தாபம் ஏற்படாதல் தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார். செப்டம்பர் 6 ஆம் தேதி இசக்கிலெட்சுமி கடையம் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது வெளியான தகவல் என்னவென்றால், வெங்கடேஷின் சகோதரர் ஆனந்த் மற்றும் அவரின் உறவினர் சிவா இருவரும் தான் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது. அவர்கள் அளித்த வாக்கு மூலம் படி, தன்னுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்ளாமல் அவமானப்படுத்தியதால் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளனர்.

திருநெல்வேலியில் பவர்கட்...! எந்தெந்த ஊர்ல என்னென்னைக்குனு தெரிஞ்சிக்கோங்க!

UDHAYAKUMAR December 20, 2022

TANGEDCO திருநெல்வேலி மாவட்டம் மின்பராமரிப்பு பணிகள் செப்டம்பர்2022 இன்று மற்றும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு.  1/9/2022 to 30/9/2022 செப்டம்பர்2022 மாதத்துக்கான மின் தடை நிலவர அட்டவணை திருநெல்வேலியில் எங்கெல்லாம் மின்தடை ஏற்படும். எப்போது மின்சாரம் திரும்ப வரும் உள்ளிட்ட தகவல்களை இங்கு காண்போம். திருநெல்வேலியில் இருக்கும் முக்கியமான பகுதிகளின் பட்டியல். 

குற்றாலத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை இடிக்கும் பணி தீவிரம்..!

Bala August 24, 2022

நீரோடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.