Gowthami Subramani January 30, 2023
உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்லாமல், சருமப் பளபளப்பிற்கும் பால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தோல் பராமரிப்பில் பல்வேறு வகையான உணவுப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பால் சருமத்தின் நன்மைகளுக்குப் பெரிதும் உதவுகிறது. இதில், உடல் நலத்திற்கு உதவக் கூடிய பால், முகத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது.
Gowthami Subramani January 16, 2023
நம் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க, ஆயிரக் கணக்கான ரூபாய் செலவு செய்து பியூட்டி பார்லர் செல்வது, அதிகமான விலையில் அழகு சாதனப் பொருள்கள் வாங்கி பயன்படுத்துவது போன்றவற்றைச் செய்கிறோம். இது போன்ற செலவுகளைச் செய்தாலும், அது நம் முகத்தில் இருப்பது குறைவான நாள்களே ஆகும். எனவே, குறைவான செலவில் வீட்டிலேயே இயற்கையான பொருள்கள் மூலம் ஃபேசியல் செய்யலாம். இது குறித்த விவரங்களை இதில் காண்போம்.
நம் முன்னோர்களான பெரியவர்கள் நமது வீட்டிலேயே அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களையே நோய் குணப்படுத்தும் மருந்துகளாக பயன்படுத்தியுள்ளனர். உண்மையில் இந்த இந்த பொருட்களெல்லாம் நோய் மருந்துகள் என தெரிந்தே அவற்றை சமையலில் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர். இதனாலேயே நம் பாட்டி, தாத்தாக்கள் பல ஆண்டு காலம் நலமுடன் வாழ்ந்தனர். நம் பாட்டி சொல்லும் வீட்டு வைத்தியங்கள் அனைத்தும் விரைவில் பலன் தரும் வகையிலே இருக்கும். எந்தெந்த பிரச்னைகளுக்கு எந்தெந்த வைத்தியங்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
Gowthami Subramani January 06, 2023
பொதுவாக, மஞ்சள் கிருமி நாசினி என்று எல்லோரும் நான் அறிந்ததே. ஆனால், இதில் உள்ள மருத்துவப் பயன்கள் ஏராளம் ஆகும். இது உடலுக்கு உட்புறம் மட்டுமல்ல. உடலுக்கு வெளியேயும் உள்ள கிருமிகளை கொன்று, உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அந்த வகையில், முகப் பொலிவிற்கு மஞ்சள் பெரும் பங்காற்றுகிறது. மஞ்சளுடன், இந்த இரண்டு பொருள்களைச் சேர்த்து முகத்திற்கு பூசி வரும் போது, முகமானது தங்கம் போல ஜொலிக்கும். இதில், மஞ்சளை எவ்வாறு முகத்திற்குப் பயன்படுத்துவது? என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
Vaishnavi Subramani January 02, 2023
நம் உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் மற்றும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் தினத்தோறும் சாப்பிடும் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். நகங்களை அதிக அளவில் வளர்த்துவதால் அதில் அதிக அளவு அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேர்த்து உணவுடன் வயிற்றுக்குள் சென்று பல வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுகிறது.
Gowthami Subramani January 02, 2023
நாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது எதாவதொரு சூழ்நிலையினாலோ ஒரு சில நேரங்களில் நம் உடம்பில் தீக்காயங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த சூழ்நிலையில், தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் காயங்கள் மறைந்தாலும், அதில் தழும்புகள் ஏற்படும். இது ஒரு சில சமயம் விரைவாக மறைந்து விடும். இன்னும் ஒரு சில பேருக்கு, இதனை சரி செய்ய சிகிச்சைகள், கிரீம்கள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனை வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே எளிமையாக தீக்காய தழும்புகளை சரி செய்யலாம். இதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
Vaishnavi Subramani December 27, 2022
தினமும் காபி மற்றும் டீ செய்யப் பயன்படுத்தும் தூள், தேயிலை கொட்டையின் மூலம் தயார்செய்வதாக நாம் அறிவோம். ஆனால் தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவதால் நம் முகம் மற்றும் கேசத்திற்குப் பல நன்மைகள் உள்ளது. அப்படிப்பட்ட தேயிலை எண்ணெயை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
Priyanka Hochumin December 27, 2022
2022 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது, முற்றிலும் புதுமையான எல்லா நல்ல விஷயங்களுடன் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்போகிறது. புத்தாண்டு காலத்தில் நமக்கு பிடித்த உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்வோம். அவர்களுக்கு தேவையான பொருட்களை பெரியவர்கள் வாங்கி தருவார்கள். ஆனால் குழந்தைகள் தங்களுடைய நண்பர்களுக்கு பணம் காசு செலவு பண்ணி வாங்கி தர அவ்ளோ விரும்ப மாட்டார்கள். எனவே, தங்கள் கைகளால் DIY craft செய்து நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். ஆனால் அதற்கு பெற்றோர்களின் உதவி அவர்களுக்கு நிச்சியம் தேவை.
Gowthami Subramani December 27, 2022
எந்தவொரு பண்டிகை என்றாலும், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது என்ன ஆடை உடுத்தலாம்? எப்படி மேக்கப் போட்டு கொள்ளலாம்? என்பது தான். மேக்கப்பை பொறுத்த வரை எத்தனையோ டிப்ஸ்கள் உள்ளன. அந்த வகையில் நம் கையில் போடும் மருதாணியோ, மெகந்தியோ தான். மருதாணியைப் பயன்படுத்தினால், அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால், கைகளில் மெஹந்தி போட்ட பின், சில காரணங்களுக்காக மெஹந்தியை அழிக்க வேண்டும் என நினைப்பர். அதன் படி, இந்தப் பதிவில் மெஹந்தியை எளிதாக எப்படி அழிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
Gowthami Subramani December 26, 2022
பெண்கள் தங்களது முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு, பல்வேறு வேதிப்பொருள்கள் கலந்த ஷாம்புக்கள், கிரீம் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதனை நீண்ட காலம் உபயோகிக்கும் போது, நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துபவையாக உள்ளன. இது போன்ற கடைகளில் விற்பனை செய்யப்படும் வேதிப்பொருள்கள் கலந்த மருந்துகளைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, நல்ல இயற்கையான முறையில் வீட்டிலேயே செய்யக் கூடிய வகையில் தயாரித்து முகப் பொலிவு மற்றும் முடி பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம். அந்த வகையில், முடி பாதுகாப்பிற்கு அரிசி கஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காணலாம்.