Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,117.20
-631.22sensex(-0.87%)
நிஃப்டி21,846.20
-209.50sensex(-0.95%)
USD
81.57

மற்ற விளையாட்டுகள்

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு ஜூலை 4-ம் தேதி தேர்தல்…சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் எச்சரிக்கையால் நடவடிக்கை

Surya June 13, 2023

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவிக்கு ஜூலை 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷ்ண், தங்களில் 6 பேருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் எனக்குற்றம்சாட்டி, 6 மாதங்களாக வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷண் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. 12 ஆண்டுகளாக தலைவராக உள்ள பிரிஜ் பூஷணின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்ததால், மே 7-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அன்று தேர்தல் நடத்தப்படவில்லை.

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி - சென்னையில் இன்று ஆட்டம் ஆரம்பம்..!!

Saraswathi June 13, 2023

உலகக் கோப்பைக்கான ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் இன்று தொடங்குகின்றன. இந்தியா, சீனா, உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டும் மீண்டும் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்துகொண்டு, விழாவை தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, இன்று காலை 10,30 மணி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. நாள்தோறும் இரவு 8.30 மணி வரை இந்தப் போட்டிகள் நடைபெறும். உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில், இந்தியா ,ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  எக்ஸ்பிரஸ் அவென்யூ, ராயப்பேட்டை. ஸ்குவாஷ் அகடமி (ஐஎஸ்டிஏ), சேத்துப்பட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடரில், இந்திய அணி இரண்டாவது சீட் (SEED) அணியாக களமிறங்குகிறது. இந்திய அணியில் தமிழ்நாடு வீராங்கனையும், இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜோஷ்னா சின்னப்பா, இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனை தான்வி கண்ணா, இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் சவுரவ் கோஷல், தமிழக வீரர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது நிலை வீரரான அபய் சிங் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலையில் ஏ, பி என இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏ பிரிவில் எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியா அணிகளும், பி-பிரிவில் இந்தியா, ஜப்பான், தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இரு பிரிவுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டிகள் 13, 14 ,15 ஆகிய மூன்று நாட்களில் லீக் போட்டிகளும், ஜூன்16ம் தேதி அரையிறுதி போட்டிகளும்,  17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.  லீக் சுற்றில் ஒவ்வொரு ஒற்றையர் பிரிவு வெற்றிக்கும் தலா 2 புள்ளி, இரட்டையர் பிரிவு வெற்றிக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும். நாக் அவுட் சுற்றில் ஆட்டம் டிராவானால் வெற்றி பெற்ற செட்களின் அடிப்படையில் வெற்றி,தோல்வி இறுதிசெய்யப்பட்டு  அறிவிப்பு வெளியிடப்படும்.

ஆசிய U20 தடகளப் போட்டி..! முதல் நாளிலேயே அசத்தலாக விளையாடி தங்கம் வாங்கிய இந்தியா.. | Asian U20 Athletics Championships

Gowthami Subramani June 05, 2023

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய u20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஜூன் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், முதல் நாளிலேயே இந்தியா 2 தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்று தொடங்கியது.

மீண்டும் பார்சிலோனாக்கு செல்லும் மெஸ்ஸி...ரசிகர்கள் உற்சாகம் | Lionel Messi Barcelona Transfer

Priyanka Hochumin June 04, 2023

தற்போதைய PSG உடனான அர்ஜென்டினா கேப்டனின் ஒப்பந்தம் ஜூன் 30 அன்று முடிவடைகிறது. ஆனால் லா லிகா அணி இன்னும் அதிகாரப்பூர்வ வாய்ப்பை வழங்காததால், பார்சிலோனாவுக்குத் திரும்பும் லியோனல் மெஸ்ஸியின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது என்று கூறப்படுகிறது. மெஸ்ஸி மீண்டும் ஸ்பெயினுக்கு திரும்ப வருவது குறித்து பார்சிலோனா ஒரு உள் பொருளாதார அறிக்கையை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் மெஸ்ஸியின் ஆண்டு வருமானம் 230 மில்லியன் யூரோக்கள், அதில் 150 மில்லியன் யூரோக்கள் புதிய ஸ்பான்சர்களிடமிருந்து வரும் என்றும், 80 மில்லியன் யூரோக்கள் டிக்கெட் விற்பனையிலிருந்து வரும் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியது.

நைட் ஆஃப் சாம்பியன்ஸ் 2023 போட்டி நடைபெறும் தேதி & நேரம், லைவ் ஸ்ட்ரீமிங் குறித்த முழுத்தகவல்கள்.. | WWE Night Of Champions 2023

Nandhinipriya Ganeshan May 24, 2023

WWE தனது மில்லியன் கணக்கான ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நைட் ஆஃப் சாம்பியன்ஸ் போட்டியை சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள ஜெட்டா சூப்பர் டோமில் (Jeddah Super Dom, Saudi Arabia) நடத்த திட்டமிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் முதல் நைட் ஆஃப் சாம்பியன்ஸ் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், இந்த போட்டியில் ரா (Raw) மற்றும் ஸ்மாக்டவுன் (Smackdown) பிராண்ட் பிரிவுகளில் இருந்து மல்யுத்த சூப்பர் ஸ்டார்கள் முதல் முறையாக பங்கேற்க உள்ளனர். இந்த பே-பெர்-வியூ (Pay-Per-View of WWE) நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் இதன் மூலம் ஒரு புதிய உலக ஹெவிவெயிட் சாம்பியனுக்கு மகுடம் சூட்டப்படும். மில்லியன் கணக்கான ரசிகர்கள் கண்டு ரசிக்க காத்துக்கொண்டிருக்கும் இந்த போட்டி எங்கு, எப்போது நடைபெறுகிறது, எப்படி இந்த போட்டியை லைவாக பார்ப்பது குறித்த முழுத்தகவல்களை பார்க்கலாம்.

குற்றவாளி யாராக இருந்தாலும் தூக்கில் போடுங்க.. பரப்பை கிளப்பிய பிரபல வீராங்கனை.. | wrestlers protest news

Nandhinipriya Ganeshan May 11, 2023

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீதான இளம் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், அவரை கைது செய்யக்கோரி கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்துள்ளது. இதனிடையே இந்த விசாரணையை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய கோரியும் டெல்லி கோர்ட்டில் மல்யுத்த வீராங்கனைகள் தர்ப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த நிலவர அறிக்கையை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷிக் மாலிக் கூறுகையில், 'இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதேபோல் புகார் கூறிய 7 வீராங்கனைகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம். அப்போது தான் யார் குற்றவாளி, யார் குற்றவாளியில்லை என்பது தெரியவரும். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை தூக்கில் போடுங்கள். பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு அனைத்து பெண்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.

இடைநீக்கத்திற்கு பின்னர் பயிற்சிக்கு திரும்பிய மெஸ்ஸி | Lionel Messi PSG

Priyanka Hochumin May 09, 2023

சவுதி அரேபியாவிற்கு செல்லும் பயணம் காரணமாக லியோனல் மெஸ்ஸி பயிற்சியை தவறவிட்டார். அதனால் சுமார் இரண்டு வாரங்களுக்கு அவர் பயிற்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் நேற்று மே 8, 2023 அன்று பயிற்சிக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. பிரெஞ்சு ஊடகங்களின்படி, கடந்த மாதம் நடைபெற்ற லோரியண்டிடம் லீக் 1 லீடர் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததற்கு அடுத்த நாள் சவுதி அரேபியாவிற்கு அங்கீகரிக்கப்படாத பயணத்தைத் மேற்கொண்டுள்ளார் மெஸ்ஸி.

தங்கத்தால் ஆன ஐபோன்கள் பரிசு..! மெஸ்ஸியின் மெர்சலான செயலால் வீரர்கள் குஷி..

Gowthami Subramani March 04, 2023

கால்பந்து உலகக் கோப்பை சேம்பியன் ஆன மெஸ்ஸி, மெர்சலான செயல் ரசிகர்களுக்கிடையே ஆனந்தத்தை அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நடந்த கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணி நிர்வாகத்தில் இருந்த 35 பேருக்கு, தங்கத்தால் செய்யப்பட்ட ஐபோன்களை பரிசாக வழங்கியுள்ளார் மெஸ்ஸி.

FIFA சிறந்த வீரருக்கான விருது...கண்டிப்பா இவருக்கு தான்...ரசிகர்கள் உற்சாகம் | FIFA Best Player 2023

Priyanka Hochumin February 28, 2023

நடந்து முடிந்த FIFA உலகக் கோப்பை காலபந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கௌரவிக்கும் வகையில் பாரிசில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த ஃபிஃபா விருதை அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அவர்கள் கைப்பற்றினார். சிறந்த வீரர் ஆண் - FIFA உலகக் கோப்பை காலபந்து போட்டியில் தரமான சம்பவத்தை செய்த லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டிஇட்டனர். இறுதியில் அந்த விருதை மெஸ்ஸி அவர்கள் தட்டி தூக்கினார்.

ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா என்ன காரணம் | Saniya Mirza Retirement

Priyanka Hochumin February 22, 2023

இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான சானியா மிர்சா தனது அதிகாரபூர்வ ஓய்வை அறிவித்துள்ளார். ஒற்றையர் டென்னிஸ் விளையாட்டில் பல பதக்கங்களை பெற்ற சானியா 2013 ஆம் ஆண்டு அதில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இப்படியாக டென்னிஸ் விளையாட்டால் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் சானியா.