Mon ,Jun 05, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57

சேலம்

ஆன்லைன் ரம்மி மோகத்தால் பரிபோன இளைஞரின் உயிர்...

Nandhinipriya Ganeshan February 07, 2023

சேலம் மாவட்டம் முள்ளாகாடு பகுதியை சேர்ந்தவர் குணசீலன் [26]. இவருக்கு பசுபதி, கமல் என்ற இரு சகோதரர்கள் இருக்கின்றனர். இவரது தாய் சிறுவயதிலேயே காலமானதால், தந்தை மற்றொரு திருமணம் செய்துக்கொண்டார். இதனால், தனது சகோதரர்களுடன் பாட்டி வீட்டில் வசித்துவந்தார். குடும்ப சூழலுக்காக கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் கூலிவேலை செய்துவந்தார். இவரது தம்பி பசுபது மதுரையில் ஒரு தனியார் ஹோட்டலில் சமையலராக வேலை செய்துவருகிறார். இந்தநிலையில் தான், குணசீலன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். ஆரம்பத்தில் தனது சம்பள பணத்தை இழந்த குணசீலன், சில நாட்களுக்குப்பிறகு நண்பர்களிடம் கடன்வாங்கி சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதை தெரிந்த தம்பி பசுபதி அந்த கடனை அடைத்து, குணசீலனை மதுரையிலேயே மற்றொரு ஹோட்டலில் சர்வர் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.

நடுரோட்டில் ஆம்னி பஸ்ஸில் பரவிய தீ.. 8 பயணிக்கு நேர்ந்த சோகம்!!

Sekar January 30, 2023

மேட்டூர் அருகே நடுரோட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு; அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

KANIMOZHI January 10, 2023

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்த நிலையில் அரசு தரப்பில் விசாரணை நடத்துவதற்காக விசாரணை குழு அமைத்து உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நிரம்பி வழியும் மேட்டூர் அணை; நீர்வரத்து  24,100 கன அடியாக அதிகரிப்பு! 

KANIMOZHI December 14, 2022

இன்று இரவு 11 மணி அளவில் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 24,100 கன அடியாக அதிகரித்ததால் அணையின் உபரிநீர் போக்கி 37 நாட்களுக்கு பிறகு இரவு பதினோரு மணி அளவில் மீண்டும் திறக்கப்பட்டது.

சாலை விபத்து; மனைவி கண் எதிரியிலேயே கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

Kanimozhi December 05, 2022

சங்ககிரி வைகுந்தம் அருகே இருசக்கர வாகனம் மீது கான்கிரீட் ரெடிமிக்ஸர் வாகனம் மோதிய விபத்தில் மனைவி கண்ணெதிரே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.20 கோடி வேணும்... கனியாமூர் பள்ளிக்கு ஆதரவாக களமிறங்கிய தனியார் பள்ளி கூட்டமைப்பு! 

Kanimozhi December 05, 2022

இதன் மூலமாக பள்ளிக்கு 30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, தற்போது பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள   10 கோடி ரூபாய் செலவு செய்து புனரமைக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பள்ளிகள் நேரடியாக திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவதற்கு அனுமதி வழங்குவார்கள் என நம்புகிறோம் எனவும் தெரிவித்தார். 

கனியாமூர் தனியார் பள்ளி இன்று முதல் திறப்பு; ஒரே ஒரு தளத்திற்கு மட்டும் சீல்! 

Kanimozhi December 05, 2022

இந்த கலவரம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம் இன்று முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை போலீஸ் பாதுகாப்புடன் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. 

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…! அதுவும் 40,000 காலிப்பணியிடங்கள்.. அசத்தல் அறிவிப்பு… எங்கு எப்போது தெரியுமா..?

Gowthami Subramani November 23, 2022

தமிழக அரசு வேலைவாய்ப்பில்லாத மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தி 40,000 காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இந்தப் பதிவில் காணலாம். சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தக் கூடிய இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 26, 2022 ஆம் நாள் நடைபெற உள்ளது.

Salem Day 2022: என்னாது சேலம் ஆங்கிலேயர்கள் உருவாக்கியதா?.. மாங்கனி நகரம் சேலத்தை பற்றிய சுவாரஸ்யங்களும் சிறப்புகளும்..

Nandhinipriya Ganeshan November 01, 2022

சேலம் மாவட்டம் 156 ஆண்டுகளை கடந்து இன்று 157 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்திலேயே சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரைக்கு அடுத்து ஐந்தாவது பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது. இந்த "சேலம் தினம்" எதற்காக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா? வாங்க தெரிந்துக்கொள்வோம். 'சேலம்' என்று அனைத்து மக்களாலும் அன்போடு அழைக்கப்படும் இம்மாநகரம் முதலில் மலைகள் சூழந்த நகரம் என்ற அர்த்தத்தில், "சைலம்" என்று அழைக்கப்பட்டுவந்தது. அதுவே காலப்போக்கில் சேலம் என்று மாறியுள்ளது. பச்சமலை, பாலமலை, ஜருகுமலை, மற்றும் சேர்வராயன்மலை என்ற நான்கு இயற்கை இந்த நகரை காவல் காக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சேலம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது மாம்பழம் தான். அதனாலையே இதற்கு "மாங்கனி நகரம்" என்ற பெயரும் உண்டு. தற்போது, சேலம் மாநகர்த்தில் இரும்பு உருக்கு ஆலை அமைந்திருப்பதால், இதற்கு "ஸ்டீல் சிட்டி" என்றும் கூறுவார்கள்.

விஷ மாத்திரை சாப்பிட்டு காதல் ஜோடி தற்கொலை… இதுல பொண்ணு மைனர்...

Gowthami Subramani October 26, 2022

சேலம் மாவட்டத்தில் காதலித்து வந்த இருவர் அவர்களது திருமணத்திற்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காடுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கோபி சிறுமியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டதாகவும் கூறப்படுகிறது.