Gowthami Subramani January 09, 2023
இந்தியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் பல்வேறு இடங்கள் சுற்றுலா இடங்களாகக் காட்சி தருகின்றன. தமிழகத்தில் உள்ள சுற்றுலா இடங்கள், பாரம்பரியமிக்கதாகவும், கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது. மேலும், தமிழகத்தில் சிறந்த சர்ஃபிங் இடங்கள் உள்ளன. இவை சுத்தமாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். இதனால், கடற்கரைகளின் அலைகளில் சவாரி செய்வதை, அனைவருமே விரும்புவர். அந்த வகையில், தமிழகத்தில் எந்தெந்த இடங்கள் சிறந்த சர்ஃபிங் இடங்களாக உள்ளது என்பது குறித்து இதில் காண்போம்.
Gowthami Subramani January 06, 2023
தமிழக வீரர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற விளையாட்டாகும். வட, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விளையாடப்படுகிறது. இருப்பினும், தென்மாவட்டங்களிலேயே ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான பங்கேற்பும், ஆவலும் அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு ஆண்டுதோறும் மக்களின் வருகைக்கேற்ப தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களைப் பற்றி இதில் காணலாம்.
Priyanka Hochumin January 06, 2023
தை திருநாள் பண்டிகையின் போது அனைவரும் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று மொத்தம் நான்கு நாட்கள் பண்டிகை கொண்டாடப்படும். பொங்கலுக்கு முந்தைய நாளே வீட்டு வாசலில் வண்ண கோலங்கள் போட்டுவார்கள். பொங்கல் அன்று அனைவரும் புத்தாடை அணிந்து, வீட்டின் நிலவு கதவில் மாங்காய் இலையால் தோரணம் கட்டி, சூரிய பகவானை வழிபட்டு, மண் பானையில் பொங்கல் வைப்பார்கள். பின்பு பொங்கலை சூரிய நாகவனுக்கு படைத்ததும் குடும்பம் மொத்தமும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.
Gowthami Subramani December 26, 2022
புத்தாண்டில், புது ஆடைகளை உடுத்தி இனிப்புகளை பரிமாறி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்வர். அதே போல, இந்த புத்தாண்டை வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக மாற்றுவதற்கு, பல்வேறு இடங்களுக்குக் குடும்பங்களுடன் சென்று, மகிழ்ச்சியான தருணத்தைச் சேகரித்து வைப்பதும் ஆகும். அதன் படி, நம் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட வேண்டிய சிறந்த இடங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
Priyanka Hochumin December 26, 2022
லட்சக்கணக்கான வருடங்களுக்கும் மேலான கலாச்சாரம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், தனித்துவமான நடனம், உணவு இப்படி எல்லா விஷயங்களிலும் முதன்மையில் இருப்பது தமிழ்நாடு. ஆம் இந்த உலகில் தோன்றிய முதல் மொழி மற்றும் தற்போது வரை நடைமுறையில் இருக்கும் முதல் மூத்த மொழி தமிழ். இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் தனது தாய் மொழியைக் கொண்டு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. கல்வி, தொழில், நிறுவனங்கள் என்று அனைத்திலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் புதுமையான மற்றும் தனித்துவமான கட்டிடக்கலையால் பல சுற்றுலாத் தளங்கள் இருக்கிறது.
UDHAYA KUMAR December 10, 2022
மலைப்பகுதியில் பயணம் செய்வதற்கென்றே பல வழிகாட்டிகள் இருப்பார்கள். அவர்களின் உதவியுடன் செல்பவர்களுக்கும் சரி, இந்த தகவல்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். மலைப்பகுதியில் பயணிப்பது தொடர்பான டிப்ஸ்கள் வாக்கிங், ஹைக்கிங், டிரெக்கிங் என பலவாறு அழைத்தாலும் தமிழில் இதை மலையேற்றம் என்றே அழைக்கிறார்கள். வாக்கிங் என்பது சமதளமான பகுதியில் 1 முதல் 4 கிமீ தூரம் அளவுக்கு நடப்பது. ஹைக்கிங் என்பது 4 மணி நேர தூரத்திலிருந்து 1 நாளுக்குள் ஏறி இறங்கிவிடும் வகையில் மலையேற்றம் செய்வது. டிரெக்கிங் என்பது மலையில் பயணம் செய்து, அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு பொழுதுபோக்கி மனதை நிம்மதியாக அமர்த்துவதுதான். மலையேற்றம் செய்வதற்கு முன் தொடர்ச்சியாக வாக்கிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும் அதிகாலை வேளையில் டிரெக்கிங் செல்ல திட்டமிடும்போது இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். காலையிலேயே மலை ஏறுவதால் அதிகம் மூச்சு வாங்கலாம். இதனால் நடைபயிற்சி வழக்கமாக செல்பவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படுவது இல்லை மூச்சு பயிற்சி, தியானம் உள்ளிட்டவை வழக்கமாக செய்ய வேண்டும் மலையேற்றத்துக்கு உடல் வலிமையும் மன வலிமையும் மிகவும் முக்கியம். மனதை அமைதியாக வைத்திருக்கவேண்டும். பயப்படக் கூடாது. இந்தியாவின் மலைப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும். இதனால் அந்தந்த மலைப்பகுதிக்கு ஏற்றவகையிலான ஷூக்களை வாங்க வேண்டும். காரமான, வயிற்றைக் கெடுக்கக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. அதேநேரம் வீட்டிலிருந்து சாப்பிட்டு செல்வதாக இருந்தாலும் பயண காலத்தில் உங்களுக்கு ஒத்துக்காத உணவுகளை தவிர்க்க வேண்டும். பிரெட், ஜாம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு, நீர்ச்சத்து நிறைந்த சாப்பிடும் பொருட்களை கொண்டு செல்லலாம் தேவைப்படும் என நினைத்து கண்டது கழியது என அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. நாமே சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். டார்கெட் வைத்து வேகமாக நடந்து செல்வதால் தேவையற்ற பிரச்னைதான் உண்டாகும். மெதுவாக நடந்து சென்று இலக்கை அடையலாம். மலையேற்றத்தின் போது சாய்வான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டாம். சமதளபரப்பில் நின்று, அமர்ந்து ஓய்வெடுங்கள் உடலுக்கு உகந்த ரொம்பவும் தளர்வாக இல்லாத அதிக எடை இல்லாத உடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். முடிந்தவரை ஆட்களுடன் செல்வது சிறந்தது. தனியாக சென்று முழித்துக் கொண்டிருக்கக்கூடாது மிக மிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. சுற்றுலா செல்வதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய அளவில் ஈடுபாடு இருக்காது. அவர்கள் படிக்க, உழைக்க, சம்பாதிக்க செய்வதை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுவார்கள். அவர்களிடம் சுற்றுலா பற்றி கேட்டால் அதிகபட்சம் கோவில்களுக்கு செல்வதையே சுற்றுலா என்பார்கள். ஆனால் இந்த தலைமுறையினர் கொஞ்சம் சுற்றுலாவைப் பற்றிய புரிதலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மன நிம்மதியைத் தேடி காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சுற்றுலாவின் நன்மையை உணர்ந்து அவ்வப்போது பயணியுங்கள்.
Priyanka Hochumin December 09, 2022
சென்னை வாசிகள் வாரம் முழுவம் மெஷின் போல ஓடி ஓடி வேலைக்குச் செல்வார்கள். வார கடைசியில் தான் அப்பாடா என்று நல்ல ரெஸ்ட் எடுப்பார்கள். அப்படி இருக்கையில் மனைவி, குழந்தைகள் மற்றும் காதலியுடன் எங்கையாவது வெளிய செல்லலாம் என்றால் மால், பீச், காபி ஷாப் போல இடங்களுக்கு செல்வார்கள். இப்படி போன இடத்துக்கே போயி அழுத்து போச்சா? கவலைய விடுங்க. இதோ சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரை ரோட் ட்ராவல் செல்லும் வழியில் இருக்கும் பல இடங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Gowthami Subramani September 16, 2022
கோடைக் காலம் வந்து விட்டால் மக்கள் படையெடுத்து நீர் இருக்கும் பகுதிக்கு அதிகம் சென்று வருவது வழக்கம். அணை, அருவி என நீர் நிறைந்து காண்போர்களை கண்கவர் பகுதியாக இருப்பது தான் கொடிவேரியில் உள்ள பகுதிகள். இது சுற்றுலாத் தளமாக, அனைவரும் விரும்பிச் செல்லக் கூடிய ஒரு இடமாகும். இந்தப் பகுதியில் உள்ள அணைகள், அருவிகள் காண்பவர்களை இந்த இடத்திலேயே இருக்க வைக்கும் எண்ணம் தோன்ற வைக்கக் கூடியது. கொடிவேரி அணை குறித்த சிறப்புகளைப் பற்றி இதில் காண்போம்.
திண்டுக்கல்லில் இருந்து 84 கீ.மீட்டரும், கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம் தான் பூண்டி. மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படும் நிலையில், கொடைக்கானல் அருகே சுவிட்சர்லாந்து இணையான கிராமமாக இது பார்க்கப்படுகிறது.
ஏழைகளின் ஊட்டி மஞ்சோலை தெரியுமா உங்களுக்கு..? தமிழகத்தில் மனிதர்கள் கால் தடம் பதியாத அழகிய இடம் என்றால் அது மஞ்சோலை தான்...!