Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,012.05
-736.37sensex(-1.01%)
நிஃப்டி21,817.45
-238.25sensex(-1.08%)
USD
81.57

அரசு வேளாண் திட்டங்கள்

டிராக்டர் வாங்க நிதியுதவி வழங்கும் இந்தியன் வங்கி.. | Indian Bank Tractor Loan

Nandhinipriya Ganeshan July 19, 2023

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அதன் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில், நாட்டின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாஃபே மற்றும் டிஎம்டிஎல் (TAFE & TMTL) உடன் இணைந்து டிராக்டர்களை குறைந்த வட்டியில் வாங்குவதற்கு லோன் வழங்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியன் வங்கியின் செயலாக்க இயக்குநர் திரு. இம்ரான் அமீன் சித்திக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் கையெழுத்து விழாவில், இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கிச்சேவைக்கான பொது மேலாளர் திரு.மணி சுப்ரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறையின் பொது மேலாளர் திரு. நரேந்திர குமார் சர்மா மற்றும் CMS துறைத் தலைவர் திரு. சௌரப் டால்மியா உட்பட, இவ்வங்கியின் மூத்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். டிஎம்டிஎல் நிறுவனத்தின் கீழ் ஐஷர் (Eicher) டிராக்டர்களும்; டாஃபே நிறுவனத்தின் கீழ் மஸ்ஸி பெர்குஷன் டிராக்டர் (Massey Ferguson Tractor - MF), டாஃபே டிராக்டர் (Tafe Tractor), IMT டிராக்டர் போன்ற டிராக்டர்களும் நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எனவே, விவசாயிகள் மற்றும் பிற தனிநபர்கள் சிரமமின்றி கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் ஆதாயத்தோடு சேர்த்து குறைந்த வட்டி விகிதங்களில் டிராக்டர்களை வாங்குவதற்கும் இந்த திட்டம் உதவும். டிராக்டர் வாங்க ஆர்வமுள்ளவர்கள், நாடு முழுவதும் 5700க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட இந்தியன் வங்கியின் எந்தக் கிளையையும் அணுகி இந்த நிதியுதவியைப் பெறலாம். இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கி/SLBC/RRB துறையின் பொது மேலாளர் திரு. வி.சந்திரசேகரன் பேசுகையில், 'நாட்டின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களான TAFFE மற்றும் TMDL உடனான இந்த ஒத்துழைப்பு, நாடு முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் சிரமமின்றியும் டிராக்டர்களை வாங்குவதற்கான கடன் வழங்க எங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், நாடு முழுவதும் 5700 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் சிறந்த சேவை வழங்கல் அம்சங்களிலும் இந்தியன் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த 2023-24 நிதியாண்டில் டிராக்டர்கள் வாங்குவதற்கான நிதியுதவிக்கு ரூ.500 கோடி ஒப்புதல் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்று அவர் கூறினார். இந்தியன் வங்கியுடனான இந்த கூட்டு முயற்சி குறித்து Tafe மற்றும் TNDL தலைமை நிதி அதிகாரி திரு. பரமேஸ்வர ரெட்டி தேவி கூறியதாவது, 'இந்தியன் வங்கியுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையானது, Tafe மற்றும் DMDL இன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் வசதியான நிதியளிப்பு விருப்பங்களையும், கடன் திட்டங்களைப் பெறுவதற்கான விருப்பங்களை வழங்கும். மேலும் இது ஒரு டிராக்டரை சொந்தமாக வைத்திருக்கும் அவர்களின் கனவுகளை நனவாக்க, நிதியளிப்பு அனுபவத்தை எளிதாக்குவதோடு சிரமற்றதாகவும் மாற்றும்' என்று தெரிவித்தார்.

காய்கறி விவசாயிகளுக்கு நற்செய்தி - ஏக்கருக்கு ரூ.8000 மானியம் | Vegetable Farmers Subsidy

Abhinesh A.R June 25, 2023

Farmers Subsidy: புகையிலைக்கு மாற்றாக காய்கறி விவசாயம் செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8000 மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி.. | Loan Assistance for Agriculture Graduates

Nandhinipriya Ganeshan March 21, 2023

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, 2023 - 2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வரும் நிலையில், வேளாண் பட்டதாரிகளுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, வேளான் சார்ந்த தொழில் தொடங்கும் 200 வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது விவசாயத் துறையை மேம்படுத்துவதோடு, வளர்ச்சியினையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார். 2021 - 22ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டதாகவும், வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதகாவும் தெரிவித்தார்.

தண்ணீர் தொட்டி கட்ட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கும் மத்திய அரசு!

Nandhinipriya Ganeshan December 26, 2022

தமிழக அளவில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர் பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் மற்றும் பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 70 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக விவசாயிகள் தண்ணீர் தேக்க தொட்டி கட்டிக்கொள்ள ரூ. 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதை எப்படி வாங்குவது, என்னென்ன ஆவணங்கள் தேவை, யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

How to: சோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் மானியம் பெறுவது எப்படி? | How to Get Solar Fencing Subsidy in Tamil

Nandhinipriya Ganeshan December 14, 2022

விவசாயிகள் பயிரிடும் பயிர்களை பூச்சிகள் மற்றும் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பெரிதும் போராட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காட்டெருமைகள், யானைகள், மயில்கள், குரங்குகள் போன்றவை பயிர்களை அதிகளவு சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதற்காக, பலரும் மின்சார வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால், சில சமயங்களில் மனிதர்களும் எதிர்பாராத விதமாக வேலியை தொடும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால், மின்சார வேலி அமைப்பது அவ்வளவாக பாதுகாப்பு கிடையாது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்… அரசின் அசத்தல் அறிவிப்பு…!

Gowthami Subramani November 08, 2022

மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு புதிய திட்டங்களை வழிவகுத்து, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவும் வகையில் பயன் தருகின்றன. அதன் படி, தமிழக அரசு தற்போது கூறியதாவது விவசாயிகள் 90% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை அமைத்துப் பயன்பெறலாம் என குறிப்பிட்டுள்ளது. அரசு வழங்கிய இந்த திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… செங்குத்து தோட்டம் அமைக்க அரசு தரும் 50% மானியம்... எப்படி விண்ணப்பிப்பது?

Gowthami Subramani September 26, 2022

பெரும்பாலானோர் தோட்டக்கலை வைத்து செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அந்த வகையில், நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு தோட்டக்கலை பயன்பாடுகள் மிக அதிக அளவில் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். அதன் படி, செங்குத்து தோட்டம் என்பது Vertical Farming என ஆங்கிலத்தில் அழைக்கப்படக் கூடிய நவீன தோட்டக்கலையின் அங்கமாகக் கருதப்படுகிறது. இந்த செங்குத்து தோட்டக்கலை அமைப்பதற்கு அரசு தரும் மானியத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கலாம்… எப்படி தெரியுமா..?

Gowthami Subramani September 23, 2022

மத்திய மற்றும் மாநில அரசு, விவசாயிகளுக்கும், விவசாயப் பெருமக்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்பான திட்டம் பிஎம் கிசான் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6000 உதவித் தொகையினைப் பெற்று வருகின்றனர். அதன் படி, இந்த திட்டத்தில் மூன்று தவணைகளாக நான்கு மாதத்திற்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும். இதில், விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும். விவசாயிகள் கடன் பெறுவதற்கு ஒரு எளிமையான திட்டமாகும்.

மாட்டுச் சாணத்திலிருந்து எரிபொருள்… அரசின் சூப்பரான திட்டம்.. இனி கவலையில்லை..!

Gowthami Subramani September 22, 2022

கொரோனா, ரஷ்ய-உக்ரைன் போர் போன்றவற்றின் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், இதற்கான பற்றாக்குறையும் மேலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் மிக அதிக வீதத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக, பிற்காலத்தில் பெட்ரோலே கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் கூறப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு..! 25% மானியம் வழங்க அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

Gowthami Subramani September 02, 2022

மத்திய மற்றும் மாநில அரசுகள், விவசாயத்தையும், விவசாயிகளின் நலனிற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ், விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும், தீவனப் பற்றாக்குறையை போக்குவதற்காகவும், ஆண்டு தோறும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.